(கு - ரை.) 1 - 4. புறநா. 139 : 3 -4; "உயர்ந்தோங்கு பெருமலை யூறின்றேறலின், மதந்தபுஞமலி நாவி னன்ன, துளங்கியன் மெலிந்த கல்பொருசீறடிக், கணங்கொ டோகையிற் கதுப்பிகுத் தசைஇ,விலங்கு மலைத் தமர்ந்த சேயரிநாட்டத், திலங்குவளைவிறலியர்" (மலைபடு. 41-6) 3. தடவென்பது வளைவுப் பொருளையுணர்த்துவதோர்உரிச் சொல்; தொல். உரி. சூ. 23. 6. "வரியெனப் படுவது வகுக்குங்காலைப், பிறந்த நிலனும் சிறந்த தொழிலும், அறியக்கூறி யாற்றுழி வழங்கல்", " கண்கூடு காண்வரியுள்வரி புறவரி, கிளர்வரி யைந்தோ டொன்றவுரைப்பிற், காட்சி தேர்ச்சி யெடுத்துக் கோளென,மாட்சியின் வரூஉ மெண்வகை நெறித்தே" (சிலப்.8 : 77, 108 உரை, மேற்.) 7. படுமலைப்பாலை - பாலைப்பண் பன்னிரண்டனுள்ஒன்று ; அது கைக்கிளை குரலாகத் தோன்றுவது. 8. ஒல்கல் - தளர்தல்; ஒற்காவுள்ளத் தொழியா னாகி" (மணி. 15 : 18) 11. "வயிரிய மாக்கள்,,,மன்ற நண்ணி"(பதிற். 29); "மன்றில் வதியுநர் சேட்புலப்பரிசிலர்" (மலைபடு. 492) 12. புறநா. 129 : 6, குறிப்புரை ; பொருந.125 - 7. 11 - 2. "பொருநர்க், குருகெழுபெருஞ்சிறப்பின், இருபெயர்ப் பேராயமொ, டிலங்குமருப்பிற்களிறுகொடுத்தும்" (மதுரைக். 99 - 102) 22. "மீக்கூற்றென்பது புகழ்; அதுமேலாய சொல்லாற் பிறந்த புகழென்னும் மேம்பாடெனப்பொருள்தந்து நிற்றலிற்பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை" (நன். வி. சூ. 178) (135)
1 ஐந்திணைக்கும் உரியனவாக ஐந்துயாழும் பண்களும் உண்மையின் இங்ஙனம் கூறினார். 2 புறநா. 39 : 1 - 2, உரை.
|