(கு - ரை.) 2. "மாயோ னன்ன மால்வரைக் கவாஅன்" (நற். 32); "மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன்" (பட்டினப்.138) 3. இழை - ஒருவரால் இழைக்கப்பட்ட அணிகலங்கள்; தொல். களவு. சூ. 4, ந. 4. "இரும்பிடிப் பரிசிலர் போல" (அகநா. 311); "பிடிக்கணஞ்சிதறும் பெயன்மழைத் தடக்கை; (சிறுபாண். 124) 5. ..."உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன், றீவார் மேனிற்கும் புகழ்" (குறள், 232) 6. கண்டீரம் - ஓரூரென்றும் உரைப்பர். இளங்கண்டீரக்கோ - கண்டீரத்தின் இளவரசன்; இவன் நள்ளியென்னும் வள்ளலுடைய தம்பியாகக் கருதப்படுவான். 7. இசின்: புறநா.150 : 24, குறிப்புரை. 8. நன்னன்-ஒரு சிற்றரசன்; மலைபடுகடாம்என்னும் பாட்டுடைத் தலைவனுக்கும் அவன் தந்தைக்கும் நன்னன் என்னும் பெயர் அமைந்துள்ளது. 11. புறநா.158 : 10 - 11; "அணங்குடைச் சாரல்...இறும்பில்" (பெரும்பாண். 494 - 5) 11-12. புறநா. 375 : 20 - 21. 5-12. கொடுப்போரேத்திக் கொடார்ப்பழித்தல்; தொல்.புறத்திணை சூ. 35. (151)
1விச்சி - ஒருமலை; இதன் அரசன் விச்சிக்கோ (புறநா. 200 : 8); “வில்கெழு தானை விச்சியர் பெருமகன்” (குறுந், 328); “இருபெருவேந்தரும் விச்சியும் வீழ” (பதிற். 9-ஆம் பத்தின் பதிகம்)’ “விச்சி மலைச்சாரற் பட்டைகொண்டு பகடாடி” (தே. ஐயாறு.)
|