(கு - ரை.) 1.புறநா. 370 : 11; “பழுமர முள்ளிய பறவையின்....புக்கு” (பொருந. 64 - 7); “பழுமரந்தேரும் பறவை போல........பாண” (பெரும்பாண். 20 - 22); “பழந்தேர் வாழ்க்கைப் பறவை போல.........துவன்றி” (மதுரைக். 576 - 80); “கனிபொழி கானங் கிளையொடுணீஇய, துனைபறை நிவக்கும் புள்ளின மான..........நன்னற் படர்ந்த கொள்கையொடு” (மலைபடு. 54 - 64) ‘படர்’ என்பது உள்ளுதலாகிய குறிப்புணர்த்துதற்கு இவ்வடிமேற்கோள்;தொல். உரி. சூ. 44, சே.; தெய்வச்; இ. வி.சூ. 232, உரை. 3. “வல்லாங்குச் செய்து” (மணி. 23 : 44) 6. மு. புறநா. 206 : 4. 6 - 7. வாழ்வாரது தொழில் வாழ்க்கைமேல் ஏற்றப்பட்டது. குவ்வுருபு பொருட்டுப்பொருண்மைக்கண் வந்ததற்கு ‘வரிசைக்கு வருந்தும்’ என்பது மேற்கோள்; சிலப். பதி. 5, அடியார்.; நன். சூ. 297, மயிலை. மு. துணைவஞ்சியென்னும் துறைக்குமேற்கோள் (தொல். புறத்திணை. சூ. 7, இளம்.); இப்பாட்டு மேற்செலவின்கண் அடங்காமையின் துணைவஞ்சியன்றென்றும், பாடாண்டிணையென்றும் கூறுவர் (தொல். புறத்திணை. சூ. 8, ந.); “வள்ளியோர்ப் படர்ந்து.......செம்மலுமுடைத்தே: இது சோழன் நலங்கிள்ளியுழைநின்று உறையூர்புக்க இளந்தத்தன்என்னும் புலவனைக் காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளிஒற்றவந்தா னென்று கொல்லப்புக்குழி அவ்வரசற்கு வருகின்ற துகளினைக் கோவூர் கிழார்புலப்படாமற் செய்யுள்செய்து, தமது சொல்லை அரசன் கேட்டு அஞ்சினானென்னும் பொருளை நிறுத்துதலிற் பழிகரப்புச்செவியுறையங்கதமாயிற்று; இவ்வாறே புறத்தினுட்செவியுறைச்செய்யுட்கள் பலவும் வருவனவுள; அவ்வேறுபாடுணர்ந்து கொள்க” (தொல். செய். சூ. 128, ந.) (47)
1. வடியாநாவென்பதற்கு இங்கே எழுதியுள்ள உரையோடு, “வடிநா” (கலித். 141 : 18) என்பதற்கு, ‘வழுவின சொற்கள் சொல்லாதபடி தெள்ளிய நா’ என நச்சினார்க்கினியர்எழுதிய உரை கருதற்குரியது.
|