(கு - ரை.) 1. புலவரை - அறிவின் எல்லை; “புலவரை யிறந்தோய் போகுதல் பொறேஎன்” (சிலப்.28 : 174); “புலவரை யிறந்த புகாரெனும் பூங்கொடி” (மணி. 5 : 109) 2. “மண்ணுற வாழ்ந்த மணிநீர்க் கிடங்கின்” (மதுரைக்.351) 4. ஞாயில் - சூட்டு; என்பது மதிலின்மீதுள்ள ஒரு சிற்றுறுப்பு; ஏப்புழைக்கு நடுவாய் எய்துமறையும் சூட்டென்பர்; சீவக. 105, ந. 5. “வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்” (பெரும்பாண்.374; மணி.4 : 5); “வெயிலொளி யறியாத விரிமலர்த் தண்காவில்” (கலித்.30 : 7) 2-6. மதுரைக்.64 - 7; பதிற்.20 : 17 - 9. 7. புறநா.36 : 6 “கருங்கைக் கொல்லர்” (சிலப்.5 : 29) என்பதையும் அதனுரைகளையும் பார்க்க. 7-8. “கனலிரும் புண்ட நீரின் விடாது” (பெருங்.3. 25 : 71); “இரும்புண்டநீர் மீள்கினு மென்னுழையிற், கரும்புண்டசொன் மீள்கிலள் காணுதியால்” (கம்ப.சடாயு. 104) 12-3. “பிறந்தி றந்துபோய்ப் பெறுவது மிழப்பதும் புகழே” (கம்ப.மந்தரை. 66)(21)
1 இப்பாட்டின் 5-6-ஆம் அடிகளில் கானப்பேரென்னும் பெயர்க்காரணம் வந்திருத்தல் காண்க.
|