(கு - ரை.) 1. அழற்குட்டம் : “அழல்சேர் குட்டத் தட்டமி (சிலப். 23 : 134) ; ஆடு - மேடராசி; அக்கினியை அதிதேவதையாகவுடைமையின் கார்த்திகைக்கு அழலென்பது பெயராயிற்று. அசுவதியின் நான்கு கால்களும், பரணியின் நான்குகால்களும், கார்த்திகையின் முதற்காலும் மேடராசிக் குரியன. பங்குனி மாதத்திற் கார்த்திகை நட்சத்திரம் உள்ள தினம் பூர்வ ஷஷ்டி அல்லது ஸப்தமி யென்பது கணிதநூற்றுணிபாதலால், அத்தினத்தின் பாதியிரவு நிறைந்த இருளையுடையதாயிற்று. 3. அனுடத்தின் வடிவமாகிய ஆறு நட்சத்திரங்களின் தொகுதி வளைந்த பனைமரம்போன்ற தோற்றமுடைமையின் அது முடப்பனை யெனப்பட்டது; ‘அனுட மாறு முடப்பனை போலும்’ என்பர். 9. ‘பாசி, ஊசியென்பன முறையே பிராசி, உதீசி யென்னும் வடமொழிச்சிதைவுகள்; உச்சிமீனுக்கு முன் எட்டாவது மீன் அத்தமித்தலும் பின் எட்டாவது மீன் உதித்தலும் இயல்பு; ‘உச்சி மீனுக்கெட்டாமீனுதயமீன் என்பர். 5 - 12. புறநா. 24 : 24 - 5; பங்குனிமாதத்தில் நட்சத்திரம் வீழின், இராசபீடை என்பர்; “ஆடு கயறே டனுச்சிங்கத் தெழுமீன் விழுமே லரசழிவாம்” என்பது சோதிடநூல். 14. புறநா. 126 : 8, குறிப்புரை. 19. புறநா. 93 : 1. 22. புறநா. 213 : 10, 228 : 11, 249 : 11. மு. பாடாண்டிணைத்துறைகளுள், ‘அச்சமு முவகையு மெச்ச மின்றி, நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமும், காலங் கண்ணிய ஓம்படை’ என்பதற்கு மேற்கோள் (தொல். புறத்திணை. சூ. 30 இளம்.); ‘ஆடிய லழற்குட்டத்து... ...மாஅயோனே : இதனுள், பாடாண்டலைவனது நாண்மீனை வீழ்மீன் நலிந்தமைபற்றிக் கூறியது’ (தொல். புறத்திணை. சூ. 36, ந.) (229)
1.புறநா, 22 குறிப்புரை, 2. புனர்பூசம் கயமாகிய குளவடிவமுடையது; அதனால், அது கயமென்றும், குளமென்றும், ஏரியென்றும் பெயர்பெறும்; “அதிதி நாள்கழை யாவண மேரி, புனர்தங் கரும்பிவை புனர்பூச மாகும்” (பிங்கலந்தை) 3.இனி மங்கலமரபிற் காரியஞ்செய்வார் வடக்கும் கிழக்கும் நோக்கியும் சிந்தித்தும் நற்கருமங்கள் செய்வாராதலின் மங்கலமாகிய வடதிசையை முற்கூறினார்’ (தொல். பாயிரம், ந.); தண்டி. சூ, 108, மேற்.
|