(கு - ரை.) 1 - 2. புறநா. 197 : 4, 369 : 24 - 7. 4. "செல்வுறு திண்டேர்க் கொடுஞ்சினை கைப்பற்றி" (கலித். 85 : 18) 7. சுவல் - பிடரி. 8. பெரும்பிறிது - மரணம். 9. காற்றாற் போக்குதலொழிக்கப்பெற்ற கப்பல்போல."வழக்கு மாறு கொண்டு" (கலித். 101 : 11) என்பதற்கும், "வழக்கு நெறி மாயம்" (சீவக.2873) என்பதற்கும் இவ்வடி மேற்கோள். 11. முகவை - முகந்துசெல்லும் பரிசில்; புறநா.369 : 27.உகவை - உகத்தல். 13. வீரர்களாகிய வைக்கோற்போரைக் கடாவிட்ட வாளாகிய ஏரையுடைய வீரனே; புறநா. 371 : 15 - 6 "ஆளழி வாங்கி யதரி திரித்த, வாளே ருழவன்" (சிலப்.26 : 233 - 4) 14 - 5. கால்வழி - காலிடம்; காற்சுவடுமாம். தெடாரி - தடாரிப் பறை; புறநா. 376 : 4. தெளிர்ப்ப - ஒலிப்ப; "பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண், இரும்பறை", "பணைமரு ணெடுந்தாட் பல்பிணர்த் தடக்கைப், புகர்முகம்" (புறநா.263 : 1 - 2, 371 : 19 - 20) 16. கோடியர் - கூத்தர். 18. ஆரத்திற்கு அரவு உவமை; "விரவுமணி யொளிர்வரு மரவுற ழாரமொடு" (புறநா. 398 : 27) (368)
|