65
மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப
இருங்கட் குழிசி கவிழ்ந்திழுது மறப்பச்
சுரும்பார் தேறல் சுற்ற மறப்ப
உழவ ரோதை மறப்ப விழவும்
5அகலு ளாங்கட் சீறூர் மறப்ப
உவவுத்தலை வந்த பெருநா ளமயத்
திருசுடர் தம்மு ணோக்கி யொருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
தன்போல் வேந்தன் முன்புகுறித் தெறிந்த
10புறப்புண் ணாணி மறத்தகை மன்னன்
வாள்வடக் கிருந்தன னீங்கு
நாள்போற் கழியல ஞாயிற்றுப் பகலே.

திணை - பொதுவியல்; துறை - கையறுநிலை.

சேரமான் பெருஞ்சேரலாதன் (பி -ம். பெருந்தோளாதன்) சோழன் கரிகாற்பெருவளத்தானோடுபொருது புறப்புண்ணாணி வடக்கிருந்தானைக் கழாத்தலையார்பாடியது.

(இ - ள்.) முழா மார்ச்சனையிடுதலொழிய,யாழ் பண்ணையொழிய, பெரிய இடத்தையுடைய பானைபாலின்மையிற் கவிழ்ந்து நெய்கடைதலையொழிய, தம்முடையகிளை வண்டார்ந்த மதுவை உண்ணாதொழிய, உழுவார் தொழில்செய்யும்ஓசையையொழிய, அகன்ற தெருவினையுடைய சீறூர்விழாவினையொழிய, உவாவந்துகூடிய பெரிய நாளாகியபொழுதின்கண் ஞாயிறும் திங்களுமாகிய இருசுடரும் தம்முள்எதிர்நின்று பார்த்து அவற்றுள் ஒரு சுடர் புல்லியமாலைப்பொழுதின்கண் மலையுள்ளே யொளித்தாற்போலத்தன்னையொக்கும்வேந்தன் முன்னாகக் கருதியெறிந்தபுறத்துற்ற புண்ணுக்கு நாணி மறக்கூறுபாட்டையுடைய வேந்தன்வாளோடு வடக்கிருந்தான்; ஆதலால், இவ்விடத்துயாம் அவனையன்றித் தனித்து உயிர்வாழும்ஞாயிற்றையுடைய பகல் எமக்கு இனி முன்பு கழிந்தநாள் போலக் கழியா-எ - று.

‘மண்முழா மறப்ப’ என்பது முதலாகியசெயவெனெச்சங்களெல்லாம் வாள்வடக்கிருந்தனனென்னும்வினையோடு முடிந்தன.

எறிந்தபுண்-எறிதல் ஏதுவாக உற்றபுண்.

‘முன்புகுறித் தெறிந்த புறப்புண்ணாணி’ என்றது, 1 மார்பில் தைத்துருவின புண்ணும்புறப்புண்ணாதலையொக்குமென நாணியென்றதாகக்கொள்க.


(கு - ரை.) 1. புறநா. 152: 14.

2. குழிசி - இங்கே தயிர்கடையும்தாழி. இழுது-நெய்.

8. புன்கண்மாலை : குறுந். 46 : 6.மலைமறைதல் : “மலைமறைந் தொளித்தி” (புறநா.8 : 8). சுடர் மலையில் மறைந்ததாகக் கூறுவது கவி மரபு.

9-11. புறநா. 66. 8; மேலுலகத்தைஅடைய விரும்பினோர் இவ்வுலக நுகர்ச்சியைத் துறந்துவிரதத்தால் உடலை மெலிவித்து யோகப் பயிற்சியால்உயிரை நீத்தற்குத் தாம் உறைந்த இடத்தைவிட்டுப் புண்ணிய திசையாகிய வடதிசையிற் சென்றுதங்குதலும், மீளாமல் நியமத்துடன் வடதிசையிற்செல்லுதலும் மரபு; அங்ஙனம் செல்லுதல் உத்தரகமனமென்றும், மகாப்பிரத்தான மென்றும் கூறப்படும் (புறநா.214, 216, 218; சிறுபஞ்ச. 73) ; கருத்து : “கரிகால்வளவனொடு வெண்ணிப்பறந்தலைப், பொருதுபுண் ணாணியசேரலாத, னழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென, இன்னாவின்னுரை கேட்ட சான்றோர், அரும்பெற லுலகத் தவனொடுசெலீஇயர், பெரும்பிறி தாகி யாங்கு” (அகநா.55): “நிறக்கவல் லிரும்பைச் செம்பொனாம் வண்ணநிகழ்த்திய விரதமேநிகர்ப்பப், பிறக்கமும் வனமுமொழித்தவணமைத்த பெரும்பதிக் குவமையும் பெறாமல்மறக்கடுங் களிற்றுக் குபேரன்வாழளகை வடக்கிருந்தது”(வில்லி. பா. இந்திரப். 25); “வாணன்றென்மாறையில் வாழ், நின்றோகை கற்பி னிலைமையெண்ணாதெதிர் நின்று வென்னிட், டன்றோ வடக்கிருந்தாண்மடப் பாவை யருந்ததியே” (தஞ்சை. 374);போரில் தோல்வியுற்றோர் வடபாற்சென்றிருத்தல்மரபென்றுங் கூறுவர். (65)


1. இராவணனது மார்பில் திக்கயங்களின்கோடுகள் பாய்ந்து உருவின அடையாளத்தை இராமன்புறப்புண்ணென்று நாணிய செய்தி இங்கே நினைவுக்குவருகிறது; கம்ப. இராவணன்வதை. 207-ஆம் செய்யுள் முதலியவற்றைப்பார்க்க.