(கு - ரை.) 1. “மண்கெழு ஞாலம்”(பதிற். 69 : 12); “மண்டிணி ஞால மாள்வோன்”(சிலப். 26 : 42); “மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கு”(மணி. 11 : 95) 1 - 3. “மண்டிணிந்த......வளியும்என்பது எண்” (தொல். இடை. சூ. 7, தெய்வச்,; ந.) 4 - 5. “வளித்தலைஇய.....நீருமென்றாஅங்கெனநாற்சீரடிக்கு இருசீரும் முச்சீரும் பொருந்தி ஆசிரியம்வந்தது” (தொல். செய். சூ. 115, ந.) 1 - 5. “அல்லதூஉம் நேரீற்றியற்சீர்இறுதிக்கண் நிற்றல் பெரும்பான்மை யெனப்படும்;மண்டிணிந்த....நீரும்” (தொல். செய். சூ. 26, பேர்.);“மண்டிணிந்த.....நீருமென ஈற்றுக்கண்வருதல்பெரும்பான்மையாதலின் இறுதிநில்லாவெனப் பொருள்கூறலாகாமையுணர்க” (தொல். செய். சூ. 26, ந.);“மண்டிணிந்த.....நீரும் : இவ்வஞ்சியடி யிறுதி நேரீற்றியற்சீர்சிறுபான்மை வந்தது” (யா - வி. சூ. 15) 7. குறள், 152. 2 - 7. “விசும்பி னன்ன சூழ்ச்சி”(தொல். உவம. சூ. 6, பேர். மேற்.) 8. பெரும்பாண். 422; “அவை நிகழ்ந்தபொழுதே அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச்செய்ய வேண்டுதலின்” (குறள், 582, பரிமேல்.) 4 - 8. “வளிமிகின் வலியுமில்லை’‘(புறநா. 51 : 3) 3 - 8. “வளியிடைத், தீயெழுந் தன்னதிறலினர்” (முருகு. 170 - 71) 1 - 8. நிரனிறை. 10. “வெண்டலைப் புணரிநின்மான்குளம் பலைப்ப” (புறநா. 31 : 14); “வெண்டலைப்புணரியின் விளிம்புசூழ் போத” (சிலப். 26 : 81) 12. “கானக நாடனை நீயோ பெரும”(புறநா. 5 : 3); “வான வரம்பனெனப் பேரினிதுவிளக்கி” (பதிற். 6-ஆம் பத்தின் பதிகம்.) 13. “ஐவர் : குறிப்பினால் தொகைப்பொருள்அறிய வந்தது” (நன். மயிலை. சூ, 268); “ஐவரென்னுந்தொகைக்குறிப்புச்சொற் பாண்டவரைக்குறிப்பாலுணர்த்திற்று” (நன். வி. சூ. 269);“ஐவரென்னுந் தொகைச் சொல் அறமகன் முதலியஐவரையும் குறிப்பான் விளக்கியவாறு காண்க” (இ- வி. சூ. 170, உரை); “அலங்குளை....சினைஇயென்பதுதருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகதேவனென்பனகொண்டது” (நன். வி. சூ. 360) 14. பொலம்பூந்தும்பை : “பொலந்தோட்டுப்பைந்தும்பை” “பொலந்தும்பை” (புறநா. 22: 20, 97 : 15); “பொலம்பூந்தும்பை” (மதுரைக்.737) 13 - 5. செய்தெனெச்சம் வினைமுதல்வினைகொண்டுமுடிந்ததற்கு ‘ஐவரொடு.....கொண்ட’ என்பது மேற்கோள்(நன். மயிலை. சூ. 343; நன். வி. சூ. 344; இ- வி. சூ. 247, உரை); ஈரைம் பதின்மரும் பொருது களத்தவியப், பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தே,ராராச் செருவினைவர்” (பெரும்பாண். 415 - 7) 16. “முதியர்ப் பேணிய வுதியஞ் சேரல்,பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை” (அகநா. 233 : 8 -9) ; “பெருஞ்சோறு பயந்த திருந்துவேற் றடக்கை”(சிலப். 23 : 55); “ஓரைவ ரீரைம் பதின்மருடன்றெழுந்த, போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த,சேரன்” (சிலப். 29 : ஊசல் வரி.) பெயரின் ஈற்றயலாகாரம்ஓகாரமாக வந்ததற்கு இவ்வடி மேற்கோள்; நன். மயிலை.சூ. 352; நன். வி. சூ. 353. 17. இயற்சீர் வெள்ளடியல்லது பிறவடிஆசிரியத்துள் மயங்குமென்பதற்கு இவ்வடி மேற்கோள;்தொல். செய். சூ. 62, பேர். 17 - 8. “பால்புளித்துப் பகலிருண்டுமாறுபடினும் எக்காலத்தினுந் தப்பா சான்றோர் மெய்ம்மொழி”(பு - வெ. 167, உரை.) 19. ஈரசைச்சீர் நின்று வேற்றுச்சீரோடுஒன்றிய சிறப்பில் ஆசிரியத்தளைக்கு இவ்வடி மேற்கோள்;யா. வி. சூ. 19. 20. ரகரமெய்யீற்று வியங்கோள்முற்றிக்குஇவ்வடி மேற்கோள்; நன். மயிலை. சூ. 337; நன்.வி. சூ. 338; இ - வி. சூ. 239, உரை. 21 - 3. நெருப்பிற்கு அஞ்சிப் புலிவாராமையின் கவலையின்றி மான்கள் தூங்குமென்பர்;“கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து, மடமான்பெருநிரை வைகுதுயில்” (புறநா. 247 : 2 - 3); “ஞெலிகழைமுழங்கழல் வயமா வெரூஉம்” (ஐங்குறு. 307) 22 - 3. “ஒன்றுபிரிந் தடங்கியவிருபிறப் பாளர், முத்தீப் புரைய” (புறநா. 367: 12 - 3); “மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்,திருபிறப் பாளர்” (முருகு. 181 - 2) 24. இமயம் பொற்கோட்டதென்பது : (புறநா.39 : 14 - 5, 369; 24; நற். 356; யா. கா. அவை. 2). இனமில்லாதபொருள் அடையடுத்த மொழிக்கு இவ்வடி மேற்கோள்; நன்.மயிலை. சூ. 400; நன். வி. சூ. 401; இ. வி. சூ. 312,உரை. 20 - 24. இமயம்போலத் துளக்கமின்றிநெடுங்காலம் நிற்பாயாகவென்றல் மரபு; “மின்னுமிழ்வைரக் கோட்டு விளங்கொளி யிமய மென்னும்,பொன்னெடுங் குன்றம் போலப் பூமிமே னிலவி வையம்,நின்னடி நிழலின் வைக நேமியஞ் செல்வ னாகி, மன்னுவாய்திருவோ டென்று வாழ்த்திநெய் யேற்றி னாரே” (சீவக.2417); “துளக்க லாகா நிலையுந் தோற்றமும்.....மலைக்கே”(நன். பாயிரம்) மு. இச்செய்யுள், ‘பால்புளிப்பினும்பகலிருளினும்....நடுக்கின்றி நிலியரோ’ என்றதனாற்செவியறிவுறூஉவும், ‘இமயம் போன்று....நடுக்கின்றிநிலியரோ’ என்றதனால் வாழ்த்தியலுமாயிற்று; இது,“பகைநிலத்தரசர்க்குப் பயந்தவாறு கூறிப் பின்னர்த்திரியாச் சுற்றமொடு விளங்கி நடுக்கின்றி நிற்பாயெனஅச்சந்தோன்றக் கூறி ஓம்படுத்தலின் “ஓம்படைவாழ்த்தாயிற்று”என்பர்; தொல். புறத்திணை. சூ. 36, ந. இதன் 16 - ஆம் அடியால் பாட்டுடைத்தலைவன்பெயர்க்காரணம் புலப்பட்டவாறு அறிதற்பாலது; “நாடுகண்ணகற்றிய வுதியஞ் சேரற், பாடிச் சென்ற பரிசிலர்போல, உவவினி வாழிய தோழி”, “கொடைக்கட னேன்றகோடா நெஞ்சி, னுதியஞ் சேரல னட்டில் போல,வொலியெழுந்து” (அகநா. 65, 168) என்பவற்றால்இத்தலைவன் குணங்கள் விளங்கும். (2)
|