(கு - ரை.) 1. உருமிசை முழக்கு - மேகமுழக்கு ; மேககர்ச்சனை முரச ஒலிக்கு உவமை ; "படுமழை யுருமி னிரங்கு முரசு" (புறநா. 350 : 4) ; "தாழிரு டுமிய மின்னித் தண்ணென, வீழுறை யினிய சிதறி யூழியிற், கடிப்பிகு முரசின் முழங்கி" (குறுந். 270 : 1 - 3) ; "முரசதிர் பவைபோன் முழங்கிடி பயிற்றி" (பரி.22 : 4) ; "கொண்மூ, இருண்டுயர் விசும்பின் வலனேர்பு வளைஇப், போர்ப்புறு முரசி னிரங்கி", "இடியுமிழ் முரசம் பொருகளத் தியம்ப" (அகநா. 188 : 1 - 3, 354 : 2) ; "உருமிடி முரசமொடு" (முருகு. 121) ; "மூரிவான முழங்கிவாய் விட்ட தொப்ப, அதிர்குரன் முரசம்", "இடியுமிழ் முரசம்" (சீவக. 543, 2900) ; "உருமி னிடிமுரசார்ப்ப" (முத்.) ; "இடியார் பணைதுவைப்ப", (பு. வெ. 121) ; "முழங்கின முகிலென முரசமே" (தக்க. 530) 2. “கருங்கை யானை கொண்மூ வாக” (புறநா. 369 : 2) 3 - 4. “மால்வரைத் தொடுத்து வீழ்ந்த மணிநிற மாரி தன்னைக், காலிரைத் தெழுந்து பாறக் கல்லெனப் புடைத்த தேபோல், மேனிரைத் தெழுந்த வேடர் வெந்நுனை யப்பு மாரி, கோனிரைத் துமிழும் வில்லாற் கோமகன் விலக்கி னானே” (சீவக. 451, ந.) என்பதற்கு இவ்வடிகள் மேற்கோள். 7. ஆடிய - வென்ற. 8. கொங்கு - கொங்கநாட்டு வீரர்களை. 11. புலம்ப - தனித்து வருந்த. 12. மன்றம் - பொதுவிடம். 16. புன்றலை - சிவந்த தலை. 16 - 7. “புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி” (புறநா. 46 : 6) 20. இறுபு - ஒடிந்து. 20 - 21. புறநா. 211 : 1 - 4 ; கலித். 45 : 3 - 5. 24. வஞ்சி - சேரர் இராசதானி ; “வஞ்சி முற்ற நீங்கிச் செல்வோன்” (சிலப். 25 : 6) 25. ஆள் போர்பு அழித்து - வீரர்களுடைய பிணங்களாலாகிய போரை அழித்து ; புறநா. 371 : 14. 26. குடபுலம் - குடநாடு. அதரி கொண்டனை - கடாவிட்டனை. 28. திணை - குலம். 29. புகர்முக முகவை - யானைப்பரிசில் ; புறநா. 371 : 20. 31. கிணை - தடாரிப்பறை. 33. நின்னோர் அன்னோர் - உன்னைப்போன்றோர். 34. சீவக. 323, ந. மேற். 33 - 4. தொல். உவம. சூ. 24, இளம். மேற். 35. நகைவர்க்கு - நட்பினர்க்கு ; “நகைவர்க் கரண மாகிப் பகைவர்க்குச், சூர்நிகழ்ந் தற்றுநின் றானை” (பதிற்.31 : 33 - 4) ; “நகைவ ரார நன்கலஞ் சிதறி” (பதிற். 37 : 4, 43 : 20) 38 - 9. “செஞ்செவி யெருவை திரிதரும், அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே” (புறநா. 370 : 26 - 7) (373)
|