400
மாகவிசும்பின் வெண்டிங்கள்
மூவைந்தான் முறைமுற்றக்
கடனடுவட் கண்டன்னவென்
இயமிசையா மரபேத்திக்
5கடைத்தோன்றிய கடைக்கங்குலாற்
பலர்துஞ்சவுந் தான்றுஞ்சான்
உலகுகாக்கு முயர்ெ..............க்
கேட்டோ னெந்தையென் றெண்கிணைக் குரலே
கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது
10தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி
மிகப்பெருஞ் சிறப்பின் வீறு..........
..............................................லவான
கலிங்க மளித்திட் டென்னரை நோக்கி
நாரரி நறவி னாண்மகிழ் தூங்குந்து
15போதறியேன் பதிப்பழகவும்
தன்பகை கடித லன்றியுஞ் சேர்ந்தோர்
பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ
மறவர் மலிந்தத.................................
கேள்வி மலிந்தத வேள்வித் தூணத்
20திருங்கழி யிழிதரு...........கலிவங்கம்
தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத் துய்த்துத்
துறைதொறும் பிணிக்கு நல்லூர்
உறைவின் யாணர்......கிழவோனே.

(பி - ம்.) 7 ‘உலகுக்காக்கும்’ 10 ‘சிதாறருஙகு’ 13 ‘மழித்த தோட்டென்னரை’, ‘மழித்ததொடடொனனரை’ 14 ‘நாரரித்தநறவ மகிழ்ந்து’ 16 ‘தன்பகைக்கடிதல்’ 17 ‘பசிப்பகைக்கடிதல்’ 21 ‘யாறறசீத்துத்’

திணை - அது; துறை - இயன்மொழி.

சோழன் நலங்கிள்ளியைக் கோவூர்கிழார்.


(கு - ரை.) 1. மாகவிசும்பு - மாகமாகிய விசும்பு (புறநா.35 : 18); மாகமாவது பூமிக்கும் சுவர்க்கத்திற்கும் நடு; பரி.1 : 47, பரிமேல்.

2. மூவைந்து - பதினைந்துதிதி.

4. இயம் - வாச்சியம். இசையா - இசைத்து.

1 - 4. புறநா.393 : 20. 5. கங்குலின் கடையில்.

8. குரலைக் கேட்டான். 14. தொல். இடை. சூ. 44, சே,; ந.மேற்.

17. “பசிப்பிணி மருத்துவன்” (புறநா. 173 : 11)

19. வேள்வித்தூணம் - யூபத்தம்பம்; புறநா.15 : 21.

புறநானூறு மூலமும் உரைவகையும் முற்றுப்பெற்றன.