(கு - ரை.) 3 - 4. “முறையெனப்படுவது கண்ணோடா துயிர்வௌவல்” (கலித். 133 :13); “எங்க ணினைய ரெனக்கருதி னேதமால், தங்கண்ணராயினுந் தகவில தண்டக்கால், வன்கண்ண னாகியொறுக்க வொறுக்கல்லா, மென்கண்ணா னாளா னரசு”(பழமொழி. 322); “தண்டமாவதுஅவ்வொழுக்கநெறியினும் வழக்குநெறியினும்வழீஇயினாரை அந்நெறி நிறுத்துதற்பொருட்டு ஒப்பநாடி அதற்குத் தகவொறுத்தல்” (குறள்,பரிமேல். உரைப்பாயிரம்) 5 - 6. “அஞ்சினர்க் களித்தலும்” (சிறுபாண்.210) 8. வாழ்க்கை : ஐங்குறுநூற்றின்முதற்பத்தால் விளங்கும். 10. போகிய : “மக்கள் போகியவணிலாடு முன்றில்” (குறுந். 41) 9 - 10. “சிலைத்தா ரகல மலைக்குநருளரெனிற், றாமறி குவர்தமக் குறுதி யாமவன்,எழுவுறழ் திணிதோள் வழுவின்று மலைந்தோர், வாழக்கண்டன்று மிலமே”, “மலைப்பரு மகல மதியார்சிலைத்தெழுந்து” (புறநா. 61 : 14 - 7, 78 : 4); “வணங்குசிலைபொருதநின் மணங்கமழகல, மகளிர்க் கல்லதுமலைப்பறி யலையே” (பதிற். 63 : 4 - 5) “இளையோர்க்குமலர்ந்த மார்பினை” (சிறுபாண். 232, ந.)என்பதற்கும், “சோலைமயி லார்கடுணை வெம்முலைகடுஞ்சும், கோலவரைமார்பு” (சீவக. 283, ந.)என்பதற்கும் இவ்வடிகள் மேற்கோள்; “மள்ளர்.........மார்ப;இது தாரடுத்தது” (தொல். புறத். சூ. 31, ந.) 11. செய்திரங்காவினை: “செய்துபின்னிரங்கா வினையொடு” (அகநா. 268 : 13); “எற்றென்றிரங்குவ செய்யற்க” (குறள், 655) “கற்றார்முற்றோன்றா கழிவிரக்கம்” (நான்மணிக். 10).“செய்திரங்கா வினையென இரங்கல்இசையேயன்றிப் பொருளது கழிவாகிய குறிப்பும்உணர்த்திற்று” (தொல். உரி. சூ. 63, சே.); “இரங்கல்,இசையேயன்றி ஒரு பொருளது கழிவாற் பிறந்தவருத்தமாகிய குறிப்பும் உணர்த்தும்; ‘செய்திரங்கா......புகழ்’எனவரும்” (தொல். உரி. சூ. 61, ந.); “செய்து.......புகழெனஇரங்கலென்னுமுரிச்சொல்.....ஒருபொருளதுகழிவாற்பிறந்த வருத்தமாகிய குறிப்புப்பொருளுணர்த்தலும் பொருந்தும்” (இ. வி. சூ. 286,உரை). சேண்விளங்கும்புகழ் : “விண்பொருபுகழ் (புறநா.11 : 6); “சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ” (பதிற்.88 : 36); “கெடாது நிலைஇயர்நின் சேண்விளங்குநல்லிசை” (மதுரைக். 209) 12. நெய்தலங்கானனெடியோய்:அரசன் பெயர்க் காரணம் இதுவே. (10)
1. குடை - பனை ஓலையால் செய்யப்படுகிறது. 2. ‘அறிதி’ என்றதற்கு இங்கேஎழுதிய உரைநயம், “ஒருவாரண மழைப்ப நீயோவந்தேனென்றாய்” (கம்ப. விராதன். 49), “எங்கைமீரேனென்கிலீர்” (தக்க. 298), “என்னென்றானெங்கட்கிறை” (நள. காப்பு) என்பவற்றிலுள்ள‘ஏனென்றாய்’, ‘ஏனென்கிலீர்,’ ‘என்னென்றான்’என்பவற்றிற்கு இன்னவாறுபொருள்செய்யவேண்டுமென்பதை நன்குபுலப்படுத்துகின்றது.
|