(கு - ரை.) 1. புறநா.20 : 1. 1-3. புறநா.13 : 5, குறிப்புரை; கலித்.132 : 5 - 8. 5. ஒளிறுதல் - விளங்குதல்; புறநா.177. 1; “ஒளிறுவாள் விழுப்புண்” (நெடுநல்.172.); “ஒளிறுவாண் மறவரும்” (மணி.1 : 68.) 6. மு. மதுரைக்.. 128. 7. புறநா.25 : 5-7, குறிப்புரை. 8-10. “ஆண்டலை யணங்கடுப்பின், வயவேந்த ரொண்குருதி, சினத்தீயிற் பெயர்புபொங்க......தொடித்தோட்கை துடுப்பாக, ஆடுற்ற வூன்சோறு” (மதுரைக்.29 - 35); “முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித், தொடித்தோட் டுடுப்பிற் றுழைஇய வூன்சோறு” (சிலப்.26 : 242 - 3) 11. களம் வேட்டலென்பது, பலிகொடுத்தலென்றும் களவேள்வி செய்தலென்றும் வழங்கும்; புறநா.372, 12; “கறுவுகொ ணெஞ்சமொடு களம்வேட்டன்றே” (முருகு. 100); “அரசுகெட....களம்வேட்ட, வடுதிறலுயர் புகழ்வேந்தே” (மதுரைக்.128 - 30); “பாண்டியன் சோழற் காய்ந்து, பெருங்கள வேள்வி செய்த பீடுடைக் காட்டு நாட்டு” (திருவால.44 : 54); “பிடித்தாடி யன்ன பிறழ்பற்பே யாரக், கொடித்தானை மன்னன் கொடுத்தான்-முடித்தலைத், தோளொடு வீழ்ந்த தொடிக்கை துடுப்பாக, மூளையஞ் சோற்றை முகந்து” (பு. வெ.160) அரசன் வேட்டதற்கு மேற்கோள்; தொல்.மரபு. சூ. 72, பேர். 12. கொள்கை - விரதம்; “தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார்” (முருகு.89) 13. புறநா.17 : 1-4, குறிப்புரை. 12-5. “நளிகடலிருங்குட்டத்தென்ற புறப்பாட்டில், ஆன்றகேள்வி .....வாள்வேந்தே என வரும் அடிகளில், பார்ப்பார் வேட்பித்தவாறும் அரசன் வேட்டவாறும் கண்டுகொள்க” (தொல்.புறத். சூ. 16, இளம்.); “நளிகடலிருங்குட்டத்து என்னும் புறப்பாட்டினுள் அந்தணன் வேட்பித்தலும் அரசன் வேட்டலும் வந்தது” (தொல். புறத். சூ. 20, ந.) 16. “நோற்றோர் மன்ற தோழி” (குறுந்.344) 16-8. “புண்ணியம் புரிந்தோர் புகுவது, துறக்க மென்னுமீ தருமறைப் பொருளே” (கம்ப.நகர. 5); புறங்கொடாது போரின்மாண்ட பகைவர் வீரசுவர்க்கம் பெறுவ ரென்பது இங்கே அறியத்தக்கது. மு. அரசன் களவேள்வி வேட்டதற்கு மேற்கோள்; தொல்.புறத். சூ. 17, இளம்.“நளிகடலிருங்குட்டத்து என்னும் புறப்பாட்டுப் பலி கொடுத்தது” (தொல்.புறத். சூ. 21, ந.) (26)
1. “வங்கம்போழ் முந்நீர்” (பு. வெ. 185)
|