(கு - ரை.) 1-2. அடுநை விடுநை என்பவற்றிலுள்ள நகரம் எதிர்கால இடைநிலை. “ஒல்வை யாயினுங் கொல்வை யாயினு, நீயளந் தறிவைநின் புரைமை” (குறுந்.259) 3-4. “மகளிர்....முத்த வார்மணற் பொற்கழங் காடும்” (பெரும்பாண்.327 - 35) 5. புறநா.11 : 5, குறிப்புரை. 6. வாய் : “வலம்படு திகிரி வாய்நீ வுதியே” (கலித்.7) 9. ‘கடி’ என்னும் உரிச்சொல் காப்பு என்னும் பொருளில் வந்ததற்கு மேற்கோள்; தொல்.உரி. சூ. 85, ந. ‘கடி’ என்னும் உரிச்சொல் காவலென்னும் பொருளில் வந்ததற்கு மேற்கோள்; இ. வி.சூ. 282, உரை. 6-9. புறநா.23 : 8 - 9, குறிப்புரை. 9-10. இயம்பலென்னும் உரிச்சொல் இசைப்பொருளுணர்த்தற்கு மேற்கோள்; தொல்.உரி. சூ. 62, சே.;சூ. 60, ந.; இ - வி.சூ. 285, உரை. 12. சிலைத்தார் : புறநா.10 : 10; “அகலிரு வானத்துக் குறைவிலேய்ப்ப, அரக்கிதழ்க் குவளையொடு நீல நீடி, முரட்பூ மலிந்த முதுநீர்” (பெரும்பாண்.292 - 4) ‘சிலை’ என்னும் உரிச்சொல் ஒலித்தற்றொழிற் பண்பில் வந்ததற்கு மேற்கோள்; நன். மயிலை.சூ. 458; நன். வி.சூ. 459. 13. “நாப்புடை பெயராது நாணுத்தக வுடைத்தே” (மணி.23 : 16) மு. ‘உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்’ என்னுந் துறைக்கு மேற்கோள் (தொல்.புறத்திணை. சூ. 10, இளம்.) “அடுநையாயினும்..... நாணுத்தகவுடைத்தே : இது புறத்துழிஞையோன்கண் தூதன் அவன் சிறப்பு எடுத்துரைத்தது” (தொல்.புறத்திணை. சூ. 12, ந.) (36)
|