(கு - ரை.) 2. தொடி - பூண். 4. மாங்கனியின்புளி ; "வண்டளிர் மாஅத்துக், கிளிபோற் காயகிளைத்துணர் வடித்துப், புளிப்பத னமைத்த புதுக்குடம்" (அகநா. 37 : 7 - 9) 5. கோட்டுமீன் - சுறாமீன் ; "கோட்டுமீன் குழாத்தின் மள்ளரீண்டினர்" (சீவக.2325). குறை - குறைக்கப்பட்ட இறைச்சி. 9. மூழ்ப்ப - மூடும்படி; புறநா.336 : 5. 15. நொடுத்து - விற்று. 16. பாவல் - பரவல். 16. பொழுதுமறுத்துண்ணல் : "பொழுதுமறுத் துண்ணுஞ் சிறு மதுகையளே" (நற். 110 : 13). உண்ணவேண்டிய காலத்தில் உண்ணுதலைத் தவிர்ந்துண்ணும் உணவையுடையேனாய் வருந்துதலை அடைந்து ; தன் வறுமையைத் தெரிவித்தபடி. 25. புறநா.398 : 13. 27. அசாவா - தளராத. 29. ஒன்று யான்பெட்டா வளவை - ஒன்றை யான் விரும்பிக் கேட்பதற்கு முன்னே ; "ஒன்றியான் பெட்டா வளவையின்" (பொருந.73) 31. நிரை - பசுக்கூட்டம் ; பசுக்களுக்கு விண்மீன்கள் உவமை ; "காயமீ னெனக் கலந்து கானிரை, மேய" (சீவக.421) 33, "இழுமென விழிதரு மருவிப், பழமுதிர் சோலை" (முருகு.316 - 7)
|