(கு - ரை.) 1.“அரசுநிலை தளர்க்கு மருப்பமு முடைய” (மலைபடு. 378); கலித். 146 : 48. 3. ஒக்கற்கடும்பு - இருபெயரொட்டு. 4. அற - தெளிய. 7. “படையார் புரிசைப் பட்டினம்”, “படையுடை நெடுமதில்” (தேவாரம்) படை - மதிலின் உறுப்பு. 8. ‘பொய்ப்பருந்துகா லொடுபறந்துபோய், மெய்ப்பருந்துடன் விண்ணிலாடவோ” (தக்க. 507) என்பதையும், ‘பொய்ப்பருந்தாவது யாகத்துக்குச் செய்தபருந்து’ என்னும் அதன் உரையையும் பார்க்க. “சுடுமனற்கலுழ னாகச் சுருதியின் படியே கோட்டி” (வி. பா. இராசசூய : 91) 12-3. “அருவி மாமலை நிழத்தவு மற்றக், கருவி வானங் கடற்கோண் மறப்பவும், பெருவற னாகிய பண்பில் காலையும்” (பொருந. 235-7) 15. பூ - கூர்மை; “பூநின்ற வேன்மன்னன்” (இறை. சூ. 17, மேற்.); “பூவெழு மழுவினாற் பொருது போக்கிய” (கம்ப.அயோத்தி. மந்திரப். 77); “அடைவாம்வை நிசிதம் பூவள் ளயில்வசி யாறுங்கூர்மை” (சூடாமணி. 7 : 16) (224)
1.சடங்கவிகள்-ஷடங்கவித்துக்கள் ஆறங்கங்களையும் அறிந்தோர;் “புத்தூர்ச் சடங்கவி மறையோன்” (பெரிய. தடுத்தாட்கொண்ட. 7); வேள்விக்குரிய முறையைக் காட்டுவோர்க்கு உபதிருஷ்டாக்கள் என்பது பெயர். 2. பருந்துவடிவமாகச் செய்வதற்குக் கருடசயனம் என்று பெயர்.
|