354
அரைசுதலை வரினு மடங்க லானான்
நிரைகா ழெஃக நீரின் மூழ்கப்
புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்
வயலமர் கழனி வாயிற் பொய்கைக்
5கயலார் நாரை யுகைத்த வாளை
புனலாடு மகளிர் வளமனை யொய்யும்
ஊர்கவி னிழப்பவும் வருவது கொல்லோ
சுணங்கணிந் தெழிலிய வணந்தேந் திளமுலை
வீங்கிறைப் பணைத்தோண் மடந்தை
10மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே.

(பி - ம்.) 5 ‘யுதைத்த’ 8 ‘வனைந்தேந்’

திணையும் துறையும் அவை.

பரணர்.


(கு - ரை.) 1. அடங்கல் ஆனா - அடங்குதலமையாத.

2. காழ் - காம்பு.

2 - 3. மூழ்குதற்கு எஃகத்தையும் தந்தை பெயர்ப்பான்; மூழ்கல் இங்கே மண்ணுமங்கலமெனப்படும்; இதுபின் நிகழ்வது; "நீரேந்தி நெய்ம்மிதந்து நிணம்வாய்ப்பில்கி யழல்விம்மிப், போரேந்திப் பூவணிந்து புலவுநாறும் புகழ்வேலோன்" (சீவக.2599) என்பதனாலும் அறியலாகும்.

4. கழனி வாயிலிலும் பொய்கையிலும்; வாயில் - வழி.

5. கயல் ஆர் - கயல்மீனை உண்ணுகின்ற. நாரையை உகைத்த வாளை மீனை.

6. ஒய்யும் - கொண்டுசெல்லும். 8. அணந்து - அண்ணாந்து.

9. இறை - சந்து; கலித்.38 - 26.

10. "பிணையெழின் மானோக்கு" (கலித். 58 : 2)மடநோக்கு (10) ஊர்கவினிழப்பவும் வருவதுகொல்லோ (7)

(354)