திணை - பொதுவியல்; துறை - கையறுநிலை. பாரிமகளிர் பாடியது. (இ - ள்.) மூவேந்தரும் முற்றியிருந்த அற்றைத் திங்களின் அவ்வெள்ளிய நிலாவின்கண் எம்முடைய தந்தையையும் உடையேம்; எம்முடைய மலையையும் பிறர்கொள்ளார்; இற்றைத் திங்களது இவ்வெள்ளிய நிலவின்கண் வென்று அறைந்த முரசினையுடைய அரசர் எம்முடைய மலையையுங் கொண்டார்; யாம் எம்முடைய தந்தையையும் இழந்தேம்-எ-று. திங்களை மாதமென்பாரும் உளர். ஒருவனை மூவேந்தரும் முற்றியிருந்தும் வஞ்சித்துக் கொன்றமையின்; 1வென்றெறி முரசின்வேந்தர்' என்றது ஈண்டு இகழ்ச்சிக் குறிப்பாய் நின்றது. |