(கு - ரை.) 1. தொல். கிளவி.சூ. 52, தெய்வச். மேற், ‘அன்னச்சேவ லன்னச் சேவலென்னும்பாட்டினுள் இரும்பிசிராந்தையடியுறை யெனினென்பது.......குறிப்புமொழி’(தொல். எச்ச. சூ. 25, தெய்வச்.) 2. ஆடு - அடுதல், கொல்லுதல். இது முதனிலைவிகாரமுற்ற தொழிற்பெயர். 4. மதியக்கோடு: “இருகோட் டொருமதியெழில்பெற மிலைத்தனை” (நக்கீரர்திருவெழுகூற்றிருக்கை) 5. மையல்மாலை-பிரிந்தவர்களுக்குமயக்கத்தைச் செய்யும் மாலைக்காலம். கை அறுபுஇனைய - செயலற்று வருந்த. 6-7. குமரியும் வடமலையும் : புறநா.6 : 1-2, 17 : 1; மதுரைக். 70-71. குமரி-கன்னியா குமரியென்னும்ஆறு. அயிரை - ஒருவகைமீன். 8. கோழி - உறையூர்; சிலப். 10 :247-8. உறையூர் இராசதானியாதலின் உயர்நிலை மாடம்கூறப்பட்டது. 9. குறும்பறை - குறுகிய இறகை உடைய பேடை;அன்மொழித்தொகை; புறநா. 69 : 12. 10. புறநா. 69 :17. 11. பிசிர் - பாண்டிநாட்டிலுள்ளதோர் ஊர்; புறநா. 215 : 6 - 7. 12. அடியுறை - அடியில் வாழ்வேன்; புறநா.198 : 26, உரை; “அடியுறை யருளாமை யொத்ததோ” (கலித்.54 : 4); “காவலற் குறுகி, அடியுறை யருண்மொழி யான்பணிந்துரைப்ப’‘ (பெருங். 1. 47: 7 - 8) 11-4. கோப்பெருஞ் சோழனுக்கும்தமக்குமுள்ள நட்பின் மிகுதியை இவ்வடிகளாற்பிசிராந்தையார் புலப்படுத்தினார். நற்செய்தி கேட்டோர்சொன்னவர்களுக்குத் தாமணிந்த அணிகலம் நல்குதல்: “அணிகலம் பரிந்து நங்கை யணிமரு ளுருவந் தந்த,மணிமருண் முறுவற் செவ்வாய் மாதவ சேனைக் கீந்து”(சூளா. கல்யாண. 182); “ஆயபே ரன்பெனு மளக்கரார்த்தெழத், தேய்விலா முகமதி விளங்கித் தேசுறத்,தூயவ ளுவகைபோய் மிகச்சு டர்க்கெலாம், நாயக மனையதோர்மாலை நல்கினாள்” (கம்ப. மந்தரை. 52) ‘புணர்ச்சி: ஒரு தேயத்தாராதல்;பழகுதல்; பலகாற்கண்டும் சொல்லாடியும் மருவுதல்; இவ்விரண்டுமின்றிக்கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும்போல உணர்ச்சியொப்பின் அதுவே உடனுயிர் நீக்கும்உரிமைத்தாய நட்பினைப் பயக்குமென்பதாம்’ (குறள்,785, பரிமேல்.); ‘கோப்பெருஞ்சோழன் துறந்துழிப்பிசிராந்தையாரும் பொத்தியாரும்போல்வார் துறந்தாரென்று கூறும் புறச்செய்யுட்கள்உதாரணம்’ என்னும் நச்சினார்க்கினியர்வாக்கியம் ஈண்டறியத்தக்கது; தொல். கற்பியல்,சூ. 52. மு. “நாராய் நாராய்” என்னும்சத்திமுற்றப்புலவர் பாடல் இங்கே ஞாபகத்திற்குவருகின்றது. (67)
1. 11 - 2-ஆம் அடிகளில் தலைவன்பெயரும் புலவர்பெயரும் அமைந்திருக்கின்றன.
|