137
இரங்கு முரசி னினஞ்சால் யானை
முந்நீ ரேணி விறல்கெழு மூவரை
இன்னு மோர்யா னவாவறி யேனே
நீயே, முன்யா னறியு மோனே துவன்றிய
5கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது
கழைக்கரும்பி னொலிக்குந்து
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்
கண்ணன்ன மலர்பூக்குந்து
கருங்கால் வேங்கை மலரி னாளும்
10பொன்னன்ன வீசுமந்து
மணியன்னநீர் கடற்படரும்
செல்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந
சிறுவெள் ளருவிப் பெருங்க னாடனை
நீவா ழியர்நின் றந்தை
15தாய்வா ழியர்நிற் பயந்திசி னோரே.

திணை - அது; துறை - இயன்மொழி, பரிசிற்றுறையுமாம்.

நாஞ்சில்வள்ளுவனை ஒருசிறைப் பெரியனார் (பி - ம்.பெயரியனார், பெயரினார்) பாடியது.

(இ - ள்.) ஒலிக்கும் முரசினையும்இனம் அமைந்த யானையையும் உடைய கடலாகிய எல்லையையுடையநிலத்தின்கண் வென்றிபொருந்திய மூவேந்தரை இன்னமும்யான் ஒருவனே பாடும் அவாவையறியேன்; நீதான் முன்னேதொடங்கி யானறியுமவன்; நீர்நிறைந்தபள்ளத்தின் கண் விதைத்த வித்து நீரின்மையாற்சாவாது கரும்புபோலத் தழைக்கும், மழையால் முகந்துசொரியப்பட்ட நீர் கோடை காயினும் மகளிர் கண்போன்றகுவளை முதலிய மலர்பூக்கும், கரியதாளையுடைய வேங்கைமலரின் நாடோறும் பொன்போலும் அப்பூவைச் சுமந்துமணிபோலும் நீர் கடற்கட்செல்லும் செவ்விய மலைப்பக்கத்தையுடையநாஞ்சிலென்னும் மலையையுடைய பொருந! சிறிய வெளியஅருவியையுடைய பெரிய மலையையுடைய நாட்டையுடையாய்!நீ வாழ்வாயாக; நின்னைப் பெற்றோராகிய நின் தந்தையும்தாயும் வாழ்க-எ-று.

நீர் மலர்பூக்குமென இடத்துநிகழ்பொருளின்தொழில்இடத்துமேல் ஏறிநின்றது.

கோடைக்காயினுமென்பது பாடமாயின்,கோடைக்கட்காயினுமென்றானும் கோடைக்கணாயினுமென்றானும்உரைக்க.
முன்னின்ற பெயரெச்சம் மூன்றும் நாஞ்சிலென்னும்நிலப்பெயர் கொண்டன.

தன் பழமை தோன்றப் புகழ்ந்துகூறுவான், மூவரையும் பாடும் அவாவை இன்னும் அறியேனென்றதாகக்கொள்க.


(கு - ரை.) 'இரங்கு' என்னும் உரிச்சொல்ஒலித்தற்றொழிற்பண்பில் வந்ததற்கு மேற்கோள்;நன். சூ. 458, மயிலை.; நன். வி. சூ. 459. இனம்- கூட்டம்.

2. முந்நீரேணி : புறநா. 35 : 1.

5. வறம் - வறுமை; இங்கே நீரின்மை.

6. கழைக் கரும்பு: "ஆலைக்கலமருந் தீங்கழைக் கரும்பே" (மலைபடு. 119);"மோடு கொண்டெழு மூரிக் கழைக்கரும்பு" (சூளா.நாடு 25); கலித். 40 : 28.

11. மணி - பளிங்கு: புறநா.150 : 27.

12. படப்பை - பக்கம்; தோட்டமுமாம்.

14 - 5. ரகரவீற்றுவியங்கோள்வாழ்த்துதற்பொருளில் வந்ததற்கு மேற்கோள்; நன்.சூ. 337, மயிலை; இ. வி. சூ. 239, உரை.

(137)