(கு - ரை.) 5. கடிமரம் - காவன்மரம்; அது பகைவர் அணுகாத வண்ணம் வளர்க்கப்படுவது. 6. யானைப்பரிசில் : புறநா. 131, 140, 394. 5 - 6. பகைவருடைய காவன்மரத்தை அல்லது காவற்சோலையை வெட்டுதலும் வெட்டாமல் அம்மரத்தில் தம்முடைய யானையைக் கட்டுதலும் அரசர்க்கியல்பு; புறநா.23 : 8 - 9, 36 : 6 - 9, 57 : 10 - 11, 336 : 4, 345:1 என்பனவற்றாலுணர்க; அனுமான் அசோகவனத்தை அழித்ததும் இங்கே அறிதற்குரியது. மு. அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கத்துள், ஏற்றற்கு மேற்கோள்; ஏற்றலாவது கொள்வோன் தனது சிறப்பிற் குன்றாமற் கொள்ளுதல்; தொல். புறத்திணை. சூ. 16, இளம்.; “இரவலர்.......யானே : இது பிறன்பாற் பெரிது பெற்றுச் சிறிது தந்தவற்குக் காட்டிய விடை” (தொல். புறத். சூ. 36, ந.) (162)
1‘யாம் என்றாள், தம்பிராட்டியாதலால், தன்பெருமிதந்தோன்ற’ (சிலப்.20 : 13, அரும்பத.) 2தொல். புறத்திணை. சூ. 36.
|