(கு - ரை.) 1. காளையின் செவ்வியழிந்தகொம்பையொத்த. 2. பொருந்தியவர் சிறார். 1 - 2. கள்ளியின் முள்ளுக்குக் கோடுஉவமை; “குண்டைக் கோட்ட குறுமுட் கள்ளி” (அகநா.184 : 8) 3. வரகு அரிகால் - வரகம்பயிரின்அரிந்த தாள். கருப்பை - எலியை; “வேலிக் கருப்பைபார்க்கும்” (புறநா. 324 : 7) 3 - 4. எய்த சிறார் முழங்குவராயின். 5. முயல்: எழுவாய். கருங்கலன் - மண்ணாற்செய்யப்பட்ட அடிசிற் பாண்டம். 4 - 6. “தூமயிர்க் குறுந்தா ணெடுஞ்செவிக்குறுமுயல், புன்றலைச் சிறாஅர் மன்றத் தார்ப்பிற்,படப்பொடுங் கும்மே” (புறநா. 334 : 2 - 4) 7. எந்திரம் - ஆலை; “கரும்பி னெந்திரம்”(ஐங்குறு. 55) 8. சுவல் - பிடர். 9. தண்பணை - மருதநிலத்தைச்சார்ந்த ஊர்கள். ஊர் (10) வன்புலத்ததுவே (6) (322)
|