219
உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்
முழூஉ வள்ளுர முணக்கு மள்ள
புலவுதி மாதோ நீயே
பலரா லத்தைநின் குறியிருந் தோரே.

திணையும் துறையும் அவை.

அவன் வடக்கிருந்தானைக் கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப்பூதநாதனார் பாடியது.

(இ - ள்.) யாற்றிடைக் குறையுட் புள்ளிப்பட்ட மரநிழற்கண் இருந்து உடம்பாகிய முழுத்தசையை வாட்டும் வீர! நின் கருத்திற்கேற்ப நின்னோடு வடக்கிருந்தார் பலராதலான், யான் இதற்கு உதவாது பிற்பட வந்ததற்கு என்னை அவரோடு சொல்லி வெறுத்தி நீ-எ - று.

யான் பிற்பட வந்ததற்கு என்னைப் புலந்து என்னோடு சொல்லாடா திருந்தாய் நீயென்றும், இவனுடனே வடக்கிருந்தோர்களும் எதிரேற்றுக் கொள்ளாமைநோக்கி நின்குறிப்பிற்கு ஏற்பப் புலந்தார் பலரென்றும் உரைப்பினும் அமையும்.

‘உள்ளாற்றுக்கவலை’ என்பதற்கு வழிக்குள்ளாகிய நாற்றிசையும் கூடிய இடமென்றுமாம்; கவர்த்தவழிக்குள்ளென்றுரைப்பாரும் உளர்.

1அரசுதுறந்து வடக்கிருந்து உயிர்நீத்த உள்ளமிகுதியான் மள்ள வென்றார்.


(கு - ரை.) 1. “செல்லாற்றுக் கவலை” (குறுந். 263: 2); “கனையெரி நிகழ்ந்த விலையி லங்காட், டுழைப்புறத் தன்ன புள்ளி நீழல்” (அகநா. 379 : 19 - 20)

2. புறநா. 320 : 13.

(219)


1.“திறைமன்ன ருய்ப்பத் திருநிற்பச் செங்கோ னடப்பக், குறைவின்றிக் கொற்ற முயரத் தெவ்வர் தேர்பணிய, உறைகின்ற காலத்தறங்கேட் டுருமுற்ற பாம்பின், அறிவன் னடிக்கீ ழரசஞ்சித் துறந்தவாறும்” (சீவக. 27)