265
ஊர்நனி யிறந்த பார்முதிர் பறந்தலை
ஓங்குநிலை வேங்கை யொள்ளிணர் நறுவீப்
போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்துப்
பல்லான் கோவலர் படலை சூட்டக்
5கல்லா யினையே கடுமான் றோன்றல்
வானேறு புரையுநின் றாணிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வ மன்றியும் விரிதார்க்
கடும்பகட் டியானை வேந்தர்
ஒடுங்கா வென்றியு நின்னொடு செலவே.

திணையும் துறையும் அவை.

.....................சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் பாடியது.

(இ - ள்.) ஊரை மிகவுங் கடந்த முரம்புநிலமாகிய முதிர்ந்த பறந் தலையிடத்து உயர்ந்த நிலையையுடைய வேங்கையினது ஒள்ளிய கொத்தாகிய நறிய பூவைப் பனையோலையால் அலங்கரித்துத் தொடுத்து................


(கு - ரை.) 2. வேங்கைப் பூமாலை: புறநா. 21: 9, 168: 15. மலர்களைப் பனந்தோட்டில் தொடுத்தல்: "கொம்மைப் போந்தைக் குடுமிவெண்டோ, டத்த வேம்பி னமலை வான்பூச், சுரியா ருளைத்தலை பொலியச் சூடி” (குறுந். 281: 2 - 4)

4. படலை - தழைவிரவித் தொடுத்த மாலை.

7 - 9. பரிசிலர் செல்வமும் வேந்தர் வென்றியும் நின்னோடு செல்லக் கல்லாயினையே எனக் கூட்டுக.

மு. ‘ஊர்நனி......செலவே: இது கோவலர்: படலைசூட்ட என்றலிற் கடவுளாகியபின் கண்டது’ (தொல். புறத்திணை. சூ. 5, ந.)

(265)