253
என்றிறத் தவலங் கொள்ள லினியே
வவ்வார் கண்ணி யிளையர் திளைப்ப
நகாஅலென வந்த மாறே யெழாநெற்
பைங்கழை பொதிகளைந் தன்ன விளர்ப்பின்
5வளையில் வறுங்கை யோச்சிக்
கிளையு ளொய்வலோ கூறுநின் னுரையே.

(பி - ம்.) 3 ‘நகாரென’

திணை - பொதுவியல்; துறை -முதுபாலை.
............. குளம்பாதாயனார் (பி - ம். குளம்பாதயானார்)பாடியது.

முதுபாலையாவது:-
‘’காம்புயர் கடத்திடைக் கணவனை யிழந்த
பூங்கொடி யரிவை புலம்புரைத் தன்று” (பு. வெ. 254)

(இ - ள்.) நின்னைப்பிரிந்து ஆற்றேனாகின்றேன்; என்னுடைய திறத்துவருத்தங்கொள்ளாதொழிவாயாக, இப்பொழுது; சுற்றப்பட்டகண்ணியை யுடைய நின்னோடு கூடி விளையாடப் போந்தஇளையோர் விளையாடா நிற்ப அவரோடு நகுகின்றிலேனென்றுகருதவந்த நின் இறந்து பாட்டை நெல் எழாத பசியமூங்கில்பட்டையொழித்தாற் போன்ற வெளுத்திருந்த வளையில்லாதவறிய கையைத் தலைமேலே ஏற்றிக்கொண்டு நின் சுற்றத்திடத்தேசெலுத்தச் செல்வேனோ இன்னும், இறந்துபடினல்லது?நின்வார்த்தையை எனக்கு சொல்லுவாயாக- எ - று.

அவலமென்றது, பிரிந்தவழிஆற்றேனென்று வருந்தும் அவலத்தை.

கூறும் நின்னுரையென அவன்சொற்கேட்டல் விருப்பினாற் கூறுவாள் போன்று மயங்கிக்கூறியவாறு.


(கு - ரை.) 1. சீவக. 1453, ந. மேற்கோள்.

3. நகாஅல் - எதிர்மறைவியங்கோள்;தன்மைக்கண் வந்தது.

3-5. கலித். 4: 16 - 7.

5. புறநா. 254: 4. 6. ஒய்தல்: பதிற். 73, 87.

(253)