280
என்னை மார்பிற் புண்ணும் வெய்ய
நடுநாள் வந்து தும்பியுந் துவைக்கும்
நெடுநகர் வரைப்பின் விளக்கு நில்லா
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்
5அஞ்சுவரு குராஅற் குரலுந் தூற்றும்
நென்னீ ரெறிந்து விரிச்சி யோர்க்கும்
செம்முது பெண்டின் சொல்லு நிரம்பா
துடிய பாண பாடுவல் விறலி
என்னா குவிர்கொ லளியிர் நுமக்கும்
10இவணுறை வாழ்க்கையோ வரிதே யானும்
மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத்
தொன்றுதா முடுத்த வம்பகைத் தெரியற்
சிறுவெள் ளாம்ப லல்லி யுண்ணும்
கழிகல மகளிர் போல
15வழிநினைந் திருத்த லதனினு மரிதே.

(பி - ம்.) 1 ‘மார்பமாப்புண்ணும்’ 4 ‘துஞ்சா கண்ண’ 10
‘வாட்கையோ......வறிதே’

திணை - பொதுவியல்; துறை - ஆனந்தப்பையுள்.

மாறோக்கத்து நப்பசலையார்.


(கு - ரை.) 1. தலைவனைத் தலைவி‘என்னை’ எனப் புறத்திணைக்கட் கூறியதற்கு மேற்கோள்;தொல். பொருளியல், சூ. 52, ந.

2. தும்பி - ஒருவகை வண்டு.

4. வேட்கும் - விரும்பும்.

5. குரால் - கூகைப்பெடை; மதுரைக்.170, ந.; கோட்டானுமாம்.

6. விரிச்சி - நற்சொல்; புறநா.68 : 17, குறிப்புரை.

7. செம்முதுபெண்டு : புறநா. 276 : 3.

6 - 7. “நெல்லொடு, நாழி கொண்டநறுவீ முல்லை, அரும்பவிழலரி தூஉய்க்கை தொழுது,பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப” (முல்லை. 8 -11)

10. இவண் - இவ்விடத்து.

13. புறநா. 248 : 1 - 5.

12 - 3. புறநா. 248; ஆம்பலல்லி -ஆம்பலாகிய அல்லிக்காயரிசி; (சீவக. 355)

11 - 3. மழித்தலை - மழித்தலையுற்றதலை; புறநா. 250 : 4 - 5, 261 : 17 - 9.

14. கழிகலமகளிர் - விதவைகள்; புறநா.238 : 6.

15. வழிநினைந்து - பிற்காலவிளைவைஎண்ணி. ‘அதனினும்’ என்றது, ‘வாழ்க்கையோ வரிது’(10) என்றதைச் சுட்டியது. இவ்வடி ‘அழிவுநினைந்திருத்த லதனினு மரிதே’ என்றிருக்கலாம் போலும்.

(280)