(கு - ரை.) 2 - 3. புறநா. 11 : 11 -3. 6 - 8. கலித். 45 : 1. 7. மணி இருளைப் போக்குமென்பதை,“இருள்பருகுமணி” (சீவக. 169) என்பதன் உரையாலும்உணர்க. 8 - 10. பிட்டன் - சேரனுடைய வீரன்; புறநா.170 : 8; “வானவன் மறவன் வணங்குவிற் றடக்கை, யானாநறவின் வண்மகிழ்ப் பிட்டன்”, “வானவன்மறவ, னசையின் வாழ்நர்க்கு நன்கலஞ் சுரக்கும், பொய்யாவாய்வாட் புனைகழற் பிட்டன்” (அகநா. 77 : 15 -6, 143 : 10 - 12) 9. “கைவண் செழிய னாலங் கானத்,தமர்கடந் துயர்த்த வேல்” (அகநா. 175 : 10 - 12) 10. “வான நாண வரையாது சென்றோர்க்,கானா தீயுங் கவிகை வண்மைக், கடுமான் கோதை” (புறநா.54 : 6 - 8) 9 - 10. “வானவன் மறவன் வணங்குவிற்றடக்கை, ஆனா நறவின் வண்மகிழ்ப் பிட்டன், பொருந்தாமன்ன ரருஞ்சமத் துயர்த்த, திருந்திலை யெஃகம்போல” (அகநா. 77 : 15 - 8) (172)
|