திணை - கரந்தை; துறை - செருமலைதல்: பிள்ளைப்பெயர்ச்சியுமாம். ................கோடைபாடிய பெரும்பூதனார் பாடியது. செருமலைதலாவது:- ‘’வெட்சி யாரைக் கண்ணுற்று வளைஇ உட்குவரத் தாக்கி யுளர்செருப் புரிந்தன்று” (பு. வெ. 25) (இ - ள்.) தாம் கொள்ளப்பட்ட ஏற்றையுடைய பெரிய ஆனிரை முன்னே போக மீட்கவருவாரைக் குறித்து அந்நிரையோடு தாம் போகாது தழையால் மூடிய பெரிய காட்டின்கண் தலைகரந்திருந்த வலிய வில்லையுடைய மறவரது ஒடுங்கிய நிலையைக் கருதாய்; போகாதொழி, போகாதொழி, நினது மேற்கோள் சிறப்பதாக, தெய்வம் மெய்யின்கண் ஏறிய புலைமகளையொப்பத் தாவித் துள்ளும் ஆனிரைமேல்; மருங்கிலே விளங்காநின்ற ஒள்ளிய வாளினையும் வீரக்கழலினையுமுடையோய்!-எ - று. புனைகழலோய்! காணாய்; ஆன்மேற் செல்லல், செல்லல்; நின் உள்ளம் சிறப்பதாகவெனக் கூட்டுக. செல்லலென்றது அவரைக் கண்டு பொருது கொன்றன்றிச் செல்ல லென்பதாம். |