(கு - ரை.) 2. களம்படக்கடத்தல்;புறநா. 91 : 2; “செங்களம் படக்கொன்று” (குறுந்.1 : 1). கழறொடி : புறநா. 128 : 5. 3. ‘அதியர்’ என்பது குடிப்பெயர். 4. திருவிற்பொலந்தார் : புறநா.10 : 10, குறிப்புரை. 6. தன்னுடைய ஆக்கங் கருதாமல் விடத்தையுண்டுபல்லுயிர்களையும் காத்தருளிய புண்ணியனாதலின்,நீலமணிமிடற் றொருவனை உவமை கூறினார்; “போகம்மீன்ற புண்ணியன்” (சீவக. 362) என்பதையும்அதன் உரையையும் பார்க்க. 5-6. ‘பால்புரை பசுங்கதிர்க் குழவித்திங்களைக் குறுங்கண்ணியாகவுடையஅழலவிர் சோதி யருமறைக்கடவுள்’ (இறை. சூ. 1.உரை). பிறைநுதற்சென்னி ஒருவன்: 1 : 9, குறிப்புரை; 55 :4 - 5, குறிப்புரை. “மிக்கொளிர் தாழ்சடைமேவரும் பிறைநுதன், முக்கண்ணான்” (கலித்.104 : 11 - 2) 7. புறநா. 6 : 28. 8. ‘விடரகம்’ என்பது அம்மலைப்பெயராகவும்கருதப்படுகின்றது; அகநா. 271, பார்க்க. விடரகம்: புறநா. 37 : 4; கலித். 103 : 19. 9. “சிறியிலை நெல்லிக்காய்”,“சிறியிலை நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய்”(அகநா. 284, 291) 10. ‘அடக்கி’ என்றது ஆழமுடைமையை;“அட்டதை, மகிழ்ந்தன்று மலிந்தன்று மதனினுமிலனே” (புறநா. 77) என்பதும் அது. 9-11. “மால்வரைக், கமழ்பூஞ் சாரற்கவினிய நெல்லி, அமிழ்துவிளை தீங்கனி யௌவைக்கீந்த.....அதிகனும்” (சிறுபாண். 99 - 103), “பூங்கமலவாவிசூழ் புல்வேளூர்ப் பூதனையும், ஆங்குவரு பாற்பெண்ணையாற்றினையும்-ஈங்கு,மறப்பித்தாய் வாளதிகா வன்கூற்றி னாவை, அறுப்பித்தாயாமலகந் தந்து” (ஒளவையார் பாட்டு); ‘இனியகனிகளென்றதுஒளவையுண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தாவனவற்றை’(குறள், 100, பரிமேல்.), “நெல்லியமுதௌவைக் களித்துநெடு வேலதிகன், மல்குபுகழ் கொண்டான்வடமலையே” (வடமலைவெண்பா) என்பவை இந்தச்சரித்திரத்தைப் புலப்படுத்தும். (91)
1. “விண்ணோ ரமுதுண்டுஞ் சாவ வொருவரும்,உண்ணாத நஞ்சுண்டிருந்தருள் செய்குவாய்” (சிலப்.12 : ‘துண்ணென் றுடியொடு’)
|