(கு - ரை.) 1. “ஒளிறுவாட் பொருப்பன்”(பரி. 22 : 1) 2. கண் வெளிறுபோதல் : “நீளிடையத்த நோக்கி வாளற்றுக், கண்ணுங் காட்சி தௌவின”(நற். 397); “என் கண்ணே, நோக்கி நோக்கிவாளிழந் தனவே” (குறுந். 44); “கோலஞ் செய்பவர்கோல வெறிப்பினான், மாலை வண்டின மாலைக்கண் கொண்டவே”(சீவக. 2397). திரங்கல் - உலர்தல்; “நிழலிடம்பெறாது, மடமா னம்பிணை மறியொடு திரங்க” (ஐங்குறு.326) 1 - 2. “அகத்தாரே வாழ்வாரென்றண்ணாந்து நோக்கிப், புகத்தாம் பெறாஅர் புறங்கடைபற்றி, மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலைத்,தவத்தாற் றவஞ்செய்யா தார்” (நாலடி. 31) 6. “நணிநணித் தாயினுஞ் சேஎய்ச்சேய்த்து” (பரி. 17 : 25) 9. “களவுப்புளி” (புறநா.352); “களவும் புளித்தன” (அகநா. 394) 10. புறநா. 115 : 3 - 4. 11. “காலி னுதிர்ந்தன கருங்கனிநாவல்” (மலைபடு. 135) 10 - 11. எக்கர்....நாவல் : மணி.17 : 25 - 30, 34. 14. “ஊன்சோற் றமலை” (புறநா.33 : 14) 14 - 5. “செல்விருந் தோம்பிவருவிருந்து பார்த்திருப்பான்” (குறள், 86) 16. பனங்குடை - பனையோலையாற்செய்யப்பட்டஉண்கலம்; புறநா. 352; “பல்குடைக் கள்ளின் வண்மகிழ்ப்பாரி” (நற். 253 : 7); “வேணீ ருண்ட குடையோரன்னர்” (கலித். 23); “ஆறுசென் மாக்கள்சோறுபொதி வெண்குடை” (அகநா. 121); “குடைகலனா,உப்பிலி வெந்தை தின்று” (நாலடி. 289); தணிகை.களவு. 339. (177)
|