(கு - ரை.) 1. சாப்பறைக்கு நெய்தற்பறையென்ற பெயர் உண்மையால், அதனை நெய்தல் என்றார்.“நெஞ்சு நடுக்குறூஉ நெய்தலோசையும்“ (மணி.6 : 71) 1 - 2. “நிறையுஞ் செல்வத் தெதிர்மனைகளிரண்டி னிகழ்மங் கலவியங்க, ளறையு மொலியொன்றினிலொன்றி லழுகை யொலிவந் தெழுதலும்” (பெரிய.வெள்ளானை. 5) 3. புறநா. 146 : 7 - 10, 167 : 8 - 9-ஆம்அடிகளின் குறிப்புரையைப் பார்க்க. 5. படைத்தோன் : ‘ஐதே கம்மவிவ்வுலகுபடைத் தோனே” (நற். 240 : 1); “இரந்துமுயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து, கெடுக வுலகியற்றியான்” (குறள், 1062) னகரவீற்றுவினைச்சொல்லின் ஈற்றயலினின்றஆகாரம் செய்யுளுள் ஓகாரமானதற்குமேற்கோள்; நன்.சூ. 352, மயிலை; நன் வி. சூ. 353. மு. “மன்றங் கறங்க மணப்பறையாயின, அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் -பின்றை, ஒலித்தலு முண்டாமென் றுய்ந்துபோ மாறே,வலிக்குமா மாண்டார் மனம்” (நாலடி. 23) (194)
|