(கு - ரை.) 1. ஏர்தரும் - எழும். 2. குடம்பை - கூடு. 1 - 2. "வெள்ளி தோன்றப் புள்ளுக்குர லியம்ப", "மதிநிலாக் கரப்ப வெள்ளி யேர்தர" (புறநா.385 : 1, 398 : 1) 3. கண்விழித்தன - மலர்ந்தன. 4. சுடர் ஒளி சுருங்கின்று - சந்திரன் ஒளிகுறைந்தது ; புறநா.398 : 1 5. இரங்குரல் - இரங்குகுரல். 6. "இரவுப்புறம் பெற்ற வேம வைகறை" (புறநா.398 : 6) ; "இரவுத்தலைப் பெயரு மேம வைகறை" (மதுரைக். 686) 7. எஃகிருள் - குறைந்த இருட்டு. ஏமம் - இன்பம். 8. கேளியர் - கேட்க. பலகோள் - பலவகை. 10. புறநா.374 : 6. 11. நயந்து - விரும்பி. 13. குய் - தாளிப்பு. 15. கலிங்கத்திற்குப் பாம்பின் தோல் உவமம் ; "அரவுரி யன்ன வறுவை நல்கி" (பொருந.83) ; கூரெயிற் றரவி னுரிவை யன்ன வானுண்டுகில்" (பாகவதம், 10 : கோவியர் துகில். 9) ; "பாழிவா யரவினுரிநிகராடை" (இலிங்க. அம்பரீடனை. 56) ; "அரவினுரியன்ன பட்டாடை" (வாயுசங். கிரியா. 13) ; "பையரா வுரியி னன்ன நடைப்படாம்" (திருவிளை. திருமண. 147) 17. "பொழிபெயல் வண்மையான்", "சுரந்தவான் பொழிந்தற்றாச் சூழநின் றியாவர்க்கும், இரந்தது நசைவாட்டா யென்பது கெடாதோதான்" (கலித்.57 : 12, 100 : 11 - 2) 15 - 6. பொருந.82 - 7. 18. கலம் - ஆபரணம். 19. செறு - வயல். 21. தீ - வேள்வித்தீ. 22. தீவொன்றிற் பொன் உண்டாகுமென்பர்; "பைம்பொன் விளைதீவினிதி தடிந்து", "நன்பொன் விளை தீவமடைந் தஃதே" (சீவக.106, 503) 23. இறுதி - ஊழிக்காலம். 24. கனலி - சூரியன். 27. "யானே பெறுகவன் றாணிழல் வாழ்க்கை" (புறநா.379 : 1) (397)
1. திருவாரூர்க்குத் தென்மேற்கில் எருக்கங்காடென ஓரூருள்ளதென்பர்.
|