(கு - ரை.) 1. யானையை அம்பாற் கொல்லுதல் : அகநா.172 : 7 - 9; பெருங். 2. 14 : 48 - 9. 2. பேழ்வாயுழுவை: புறநா.33 : 9. பெரும்பிறிது: மணி.23 : 28. 3. புகர் - புள்ளிமான்; "புகராருருவாகி முனிந்தவனை" (பெரிய திருமொழி.2 : 4 : 7) 4. ‘வேழக்கரும்பு, கேழற்பன்றியென்புழித் தொக்கனவில்லையெனினும் தொகையென வேண்டப்படுமாகலான் அவற்றைத் தழுவுதற்கும், உருபு முதலாயின தொகுதலிற் றொகையென்பார்க்கும் ஒட்டி ஒரு சொன்னீர்மைப் படுதலும் தொகையிலக்கணமெனல் வேண்டும்' (தொல்.எச்ச. சூ. 16, சே.); ‘கேழற்பன்றி, வேழக்கரும்பென்பனவற்றிற்குத் தொக்கன இன்மையிற் றொகைச்சொல்லாமாறு என்னையெனின், அவற்றிற்கும் ஒன்றையொன்று விசேடித்து நிற்கின்ற தன்மையை உணர்த்துதற்கு வரும் ஆகிய என்னும் வாசகம் தொக்குநின்றதென்றே கோடும்' (தொல். எச்ச. சூ. 16, ந.); ‘கேழற்பன்றி முதலாயினவும் சாதிதொக்க பண்புடைமையின் ஈண்டு வேண்டினாரென்க', ‘பூமலர், பூம்போது, களிற்றொருத்தல், கேழற்பன்றி யென்றற்றொடக்கத்தன வோவெனின்,......கேழலென்பது எய்ப்பன்றி முதலானவற்றை நீக்குதலானும் பொருள்வேறுபாடுடைமையின் ஒருபொருட்பன்மொழியாகா; பண்புத் தொகையுள் அடங்குமென்க' (நன். சூ. 364, 367, மயிலை.) 3-4. உரற்றலைக்கேழற்பன்றி: "உரற்றலை யுருவப் பன்றி யிடம் வலந் திரிய" (சீவக.2202) 5. வல்வில் வேட்டம் - மிக்க வன்மையையுடையதும் பலவற்றை ஊடுருவிச் செல்லும்படி அம்பை விரைவிற் செலுத்துவதுமாகிய வில் வேட்டம்; புறநா.150 : 7; "அரக்கர் தலைவன்றன், வற்பார் திணிதோளைந் நான்குந் துணித்த வல்வி லிராமனிடம்" (பெரிய திருமொழி,5. 1 : 4) 1-6. இவ்வடிகளுடன், "அலையுருவக் கடலுருவத் தாண்டகைதன் னீண்டுயர்ந்த, நிலையுருவப் புயவலியை நீயுருவ நோக்கையா, உலையுருவக் கனலுமிழ்கட் டாடகைதன் னுரமுருவி, மலையுருவி மரமுருவி மண்ணுருவிற் றொருவாளி", "வெய்ய வாளியை யாளுடை வில்லியும் விட்டான்", "ஏழு மாமர முருவிக்கீ ழுலகமென் றிசைக்கும், ஏழு மூடுபுக் குருவிப்பின் னுடனடுத் தியன்ற, ஏழி லாமையின் மீண்டதவ் விராகவன் பகழி" (கம்ப. குலமுறை. 26, மராமர. 137, 138) என்பவை ஒப்புநோக்கற்பாலன. 8. கொலைவன் - கொல்லுதற்றொழில்செய்பவன்; "கொலைவ னல்லையோ கொற்றவ னாயினை" (மணி.25 : 174); கலித். 12 - 1, 103 : 15, 147 : 25. 10. மு. முருகு.104. 14. புறநா.65 : 1. 15. "கண்ணறுத் தியற்றிய தூம்பு" (பதிற். 41 : 3); "ஓய்களிறெடுத்த நோயுடை நெடுங்கை, தொகுசொற் கோடியர் தூம்பி னுயிர்க்கும், அத்தம்" (அகநா. 111 : 8 - 10); "கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின்" (மலைபடு.6) 17. "நொடிதரு பாணிய பதலையும்" (மலைபடு.11) என்பதும், "மாத்திரையைச் சொல்லுந் தாளத்தையுடைய ஒருகண்மாக்கிணையும்" என்னும் அதனுரையும் ஈண்டு அறியற்பாலன. 18. மாக்கோல்: "வெண்கடைச் சிறுகோ லகவன் மகளிர்" (குறுந். 298); "தேமுதிர் சிமையக் குன்றம் பாடும், நுண்கோ லகவுநர் வேண்டின்" (அகநா.208 : 2 - 3) 14-8. மலைபடு.2 - 11. 20. "துறைபல முற்றிய" (மலைபடு.40) என்பதன் உரையைப் பார்க்க. 22. ஆகலென்னும் வினைக்குறிப்புச்சொல் சார்ந்துநின்ற சொற் பொருளையே உணர்த்தி நிற்றற்கு மேற்கோள்; தொல். இடை. சூ. 32, ந. 21-2. புறநா.150 : 22 - 3; "சான்றோர், புகழுமுன்னர் நாணுப, பழியாங் கொல்பவோ காணுங் காலே" (குறுந். 252); "தம்புகழ் கேட்டார்போற் றலைசாய்த்து மரந்துஞ்ச" (கலித். 119 : 9); "பிறர்தன்னைப் பேணுங்கா னாணலும்" (திரி. 6) 25. புறநா. 399 : 29; "ஒன்றியான் பெட்டா வளவையின்" (பொருந.73); "நீசில மொழியா வளவை" (சிறுபாண். 235) 28. "தாவி னன்பொன் றைஇய பாவை" (அகநா.212) 31-2. கொல்லிமலை ஓரிக்குரியதென்பது, "கொல்லி யாண்ட வல்வி லோரி" (புறநா.158 : 5), "ஓரி, பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி", "வல்வி, லோரிக் கொன்று சேரலற் கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி" (அகநா.208 : 21 - 2, 209 : 14 - 5) என்பவற்றாலும் விளங்கும். மு. ‘வேழம் வீழ்த்த விழுத்தொடைப்பகழி யென்னும் புறப்பாட்டு, இடைநிலத்திற் பரிசுபெற்றமை கண்டார்க்குக்கூறியது' (தொல். புறத்திணை. சூ. 36, ந.) (152)
1. "ஏழேயேழே நாலேமூன் றியலிசை யிசையில்பா வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்" (தேவாரம், திருத்தாளச்சதி), "பண்களுக்கு இன்றியமையாத மூவேழ்திறம்" (சிலப். 5 : 35 - 7, அடியார்) என்பனவும் ஈண்டறியத்தக்கன. 2. பொருந 55, ந.
|