(கு - ரை.) 1. "வல்லூற் றுவரி தோண்டி" (பெரும்பாண். 97 - 8); "குடம்புகாக் கூவற் கொடுங்கானம்" (சிலப்.29 : காவற்பெண்டு சொல்.) கூவல் - கிணறு. 2. விற்போராகிய உழவுத்தொழிலால் வாழும் வாழ்க்கையையுடைய தலைவன் ; "வில்லுழு துண்மார்" (புறநா.170). மதவென்பது வலியை யுணர்த்துவதோருரிச்சொல் : மதவலி - மிக்க வன்மையுடைய தலைவன் ; "மதவலி விடுப்ப வேகி" (சீவக.204) 3. மிக்க வறுமையையுற்றானாயினும். 4. ஞெலியும் - கடையும். 4 - 5. "இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்து" (புறநா. 324 : 11) ; "இடையன்.............ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழிச், செந்தீ" (பெரும்பாண்.175 - 8) 8. பந்தரில். முறை - வரிசை ; "முறையி னுண்ணு நிறையா வாழ்க்கை" (புறநா.325 : 6) 9. மகடூஉ - மனைவி. 6 - 9. "குடநீரட் டுண்ணு மிடுக்கட் பொழுதும், கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினும், கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி, மாதர் மனைமாட்சி யாள்" (நாலடி.382) 9-13. புறநா. 334 : 7 - 11. (331)
|