(கு - ரை.) 1. புறநா. 228 : 12, குறிப்புரை. 2. செவிசெஞ்சேவல் : புறநா. 370 : 26, 373 : 38; அகநா. 77. 1-2. 'கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த, செவிசெஞ் சேவலும்: என முறை மயங்கி வந்ததாலெனின், ஆண்டுச் செஞ்செவியென்பது மொழிமாறி நின்றது' (தொல். கிளவி. சூ. 26, தெய்வச்.) 3. மு. புறநா. 362 : 17. 1-3. செய்யுட்கண் வண்ணச்சினைச்சொல் அடை சினை முதலெனு மூன்றும் முறைமயங்கி வந்ததற்கு மேற்கோள் (தொல். கிளவி. சூ. 26, சே.,ந.; இ. வி. சூ. 314, உரை); ‘கவிசெந்தாழிக்......கூகையுங் கூடி: எனவருவன, கொம்புகூர்மாடு, மடல்விரிதாழை என்றாற்போல வருதலின், உயர்திணை தொடர்ந்த பொருண்முதலாறும் என்னுஞ் சூத்திரத்துள் அஃறிணையொடு சார்த்தின் அஃறிணை முடிபினவாமென அமைத்த தன்பாற்படுமென்க' (நன். வி. சூ. 403) 6. புறநா. 261 : 18 - 9, 280 : 14. 8. முரசங் கண்கிழிதல் : புறநா. 229 : 19. 10-12. ‘வெந்திறற் கூற்றம்......அந்தோவளியேன் வந்தனென் மன்ற: என்றவழி அந்தோவென்பது கேடுகுறித்து நின்றது' (தொல். இடை. சூ. 33,தெய்வச்.) 14. மரம்: பு. வெ. 111, உரை. 18-9. "சங்கடத்திற் சாவதே நன்று" (தனிப்பாடல்) (238)
|