((கு - ரை.) 1. கள்ளினைவாழ்த்தி; புறநா. 297 : 6. 2. சீத்தல் - தூத்தல்; பெருக்கல்;“மந்தி சீக்கு மணங்குடை முன்றிலில்” (புறநா.247 : 4) “மந்தி சீக்கு மாதுஞ்சு முன்றில்” (பெரும்பாண்.497) 3. நாட்செருக்கு அனந்தர் - விடியற்காலத்துக்கள்ளைக் குடித்த மயக்கத்தால். 1 - 4. காட்டு - செத்தை; “துடைப்பந்துகட்காட்டுப் புல்லிதழ்” “காட்டுக் களைந்து”(ஆசார. 45 - 6). ஒடு: அசை. தூவாத முன் வாயிலினிடத்தேதானுண்ட கள்ளை வாழ்த்தி நாட்கால அனந்தரால்துயில்வோன்; “முன்றிற்கிடந்த பெருங்களியாளற்கு” (புறநா. 317 : 2) தூங்குவோனாகிய அவனேஎம் தலைவன். 5 - 6. நேற்றுவந்த விருந்தினரைஉபசரித்ததற்காகத் தன் பழைய வாட்படையை ஈடாகவைத்தான்.இன்று - இன்றைத்தினம். 7. பணையம் - ஈடு. 8. ஈயாதவனென்றுகருதாமல் நீயும். அணிகலத்தை அணியவும்; வள்ளி - பூங்கொடி. மு. ‘மறவன் ஆரமரோட்டல் கூறியது’என்பர்; தொல். புறத்திணை. சூ. 6, ந. (316)
|