(கு - ரை.) 1. நெற்கவளம் : புறநா.44 : 2, குறிப்புரை. 2. மா - ஒருவகையளவை; “மாமாவின்வயின்வயினெல்” (பொருந. 180) 4. வேற்றுமைக்கண் யகரவீற்றின்முன்பகரம் இயல்பாயதற்கு மேற்கோள்; நன். சூ. 223, மயிலை.நன். வி. சூ. 224; இ. வி. சூ. 133, உரை. 5, “நல்லற நெறிநிறீஇ யுலகாண்டவரசன்” (கலித். 129 : 4) 5 - 6. “குடியோம்பிக், கொள்ளுமாகொள்வோற்குக் காண்டுமே மாநிதியம், வெள்ளத்தின்மேலும் பல” (நீதிநெறி. 29) 8. “கல்லென் சுற்றமொடுகால்கிளர்ந்து திரிதரும்” (பெரும்பாண். 21);“கல்லென் சுற்றக் கடுங்குர லவித்து” (குறிஞ்சிப்.151) 9. நற். 226 : 2 - 3. 5 - 11. புறநா. 75. மு. “வாய்ப்படுங் கேடுமின்றாம் வரிசையி னரிந்து நாளுங், காய்த்த நெற்கவளந் தீற்றிற் களிறுதான் கழனி மேயின், வாய்ப்படலின்றிப் பொன்றும் வல்லனாய் மன்னன் கொள்ளின்,நீத்தநீர் ஞால மெல்லா நிதி நின்று சுரக்கு மன்றே”(சீவக. 2907); “மாநிரப்புறாச் சிறுபுலப் பயன்களும்வயக்கரி நிலைநாடித், தான ளித்திடி னடுபசி கெடுமதுசார்ந்துபுக் குணின்வேலி, யான தென்னினுங் வாலினுங்காலினு மழிந்துவாய் புகலின்றிப், போன தாமதுபோன்றதவ் விறைமகன் புவியெலாம் பொலிவற்றே”(சீகாழித்தலபுராணம், பூதவிமோசனமானவத்தியாயம்,7) வாயுறைவாழ்த்திற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 29, இளம்.; சூ. 35, ந. (184)
1 “இகழி னிகழ்ந்தாங் கிறைமகனொன்று, புகழினு மொக்கப் புகழ்ப” (நீதிநெறி.44)
|