(பி - ம்.) 1 ‘ஞாலத் தியங்கும்’ திணை - பொதுவியல்; துறை - பொருண்மொழிக்காஞ்சி. தொண்டைமான் இளந்திரையன் பாட்டு. (இ - ள்.) உருளையையும் பாரையும்கோத்து உலகின்கண்ணே செலுத்தும் காப்புடைய சகடந்தான்அதனைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின் ஊறுபாடில்லையாய்வழியை இனிதாகச் செல்லும்; அவன் அதனை இனிதாகச்செலுத்துதலைத் தெளியமாட்டானாயின் அது நாடோறும்பகையாகிய செறிந்த சேற்றிலே அழுந்தி மிகப்பலதீய துன்பத்தை மேன்மேலும் உண்டாக்கும்-எ - று. இஃது, உலகாளுமுறைமை கூறுதலையுட்கொண்டுசகடம்செல்லுறு மாற்றைக் கூறினமையின், நுவலாநுவற்சியென்னும்அலங்காரமாயிற்று; ஒட்டென்று கூறுவாரும் உளர். அன்றி இதற்கு உலகத்தின்கண்ணேஉலகியற்கையை நிறுத்தி அதனோடு ஞாலத்தின்கண்ணேசெலுத்தப்படும் காப்பாகிய சகடம் தன்னைச்செலுத்துவோன் மாட்சிமைப்படின் தனக்கு ஓரிடையூறுமின்றாகிநெறி முறைமையே நடக்கும்; அதனைச் செலுத்துதல் தெளியானாயின்அச்சாகாடு நாளும் மறுதலையென்னும் செறிந்தஅள்ளலிலே அகப்பட்டுத் தனக்கும் தன்கீழ்வாழ்வார்க்கும்மிகப்பலவாகிய தீக்கேட்டினை மேன்மேலும் தருமெனவும் பொருளுரைப்பர்; இப்பொருட்குப் பாரென்றது,உலகியற்கையை. கால் - உருளை. |