(கு - ரை.) 3. “வேரொடு நனைந்துவேற்றிழை நுழைந்த, துன்னற் சிதாஅர்” (பொருந.80-81). சிதார்-கந்தை. 4. உயவல் : மணி. 3 : 90. 5. மேற்கோளில்லாதவனுடைய உடம்புவாடியிருக்கும் என்றபடி. 6. ஒக்கலை-சுற்றங்களை உடையாய். 11. “செற்றமுங் கலாமுஞ் செய்யாதகலுமின்” (மணி. 1 : 63) கலாஅம்-போர். 12. புறநா. 67 : 8-9; பட்டினப். 285. உறையூரென்பதனை உறந்தையென முன்னோர்திரித்து வழங்கியதற்கு மேற்கோள்; தொல்.செய். சூ. 80, பேர்.; ந. 13. “திருமா வளவன் றெவ்வர்க்கோக்கிய, வேலினும் வெய்ய” (பட்டினப். 299 -300). ஓக்கிய - எடுத்த. 16. கிள்ளிவளவன் : பாட்டுடைத்தலைவன் பெயர். 17. கடும்பகல்-பத்து நாழிகைமுதல்இருபது நாழிகை இறுதியாகவுள்ள காலம். 18. “நயந்தோர்க்குத், தேரீயும்வண்கை யவன்” (கலித். 42); தேர் வீசுதல் : மதுரைக்.752. 20. “ஆடுவண் டிமிரா வழலவிர் தாமரை”(பெரும்பாண். 481) 16-21. புறநா. 11 : 11 - 7. 20-21. பொற்றாமரைப்பூவைப் பெறுவாய்.“உயவற்பாண, கிள்ளிவளவன்பாற் செல்வாயாயின்,செல்வமெய்துவை” எனக்கூறினமையால், இதுவும்பாணாற்றுப் படையாயிற்று. (69)
1. “இன்சொலா லீத்தளிக்க வல்லாற்கு”(குறள், 387) 2 “அற்றங் காவாச் சுற்றுடைப்பூந்துகில்” (மணி. 3 : 139) 3 ‘தலைமகனால் தலைநின்று ஒழுகப்படுவனதருமார்த்த காமமென்பன; அம்மூன்றினையும் ஒரு பகலைமூன்று கூறிட்டு முதற்கட் பத்து நாழிகையும் அறத்தொடுபட்டுச்செல்லும்; இடையன பத்து நாழிகையும் அருத்தத்தொடுபட்டுச்செல்லும்; கடையன பத்து நாழிகையும் காமத்தொடுபட்டுச் செல்லும்; ஆதலால் தலைமகன் நாழிகையளந்துகொண்டுதருமத்தொடு படுவான், தலைமகளும் வேண்டவே தானும் வேண்டப்போந்துஅத்தாணி புகுந்து அறங்கேட்பதும் அறத்தொடு பட்டுச்செல்வதும் செய்யும்; நாழிகை யளந்து இடையன பத்துநாழிகையும் இறையும் முறையும் கேட்டு அருத்தத்தினொடுபட்டுவாழ்வானாம்’ (இறை. சூ. 40, உரை)
|