(கு - ரை.) 1. தழை-ஒருவகையுடை; அஃது ஆம்பல் முதலிய மலர்களினாலேனும், தளிர்களினாலேனும், விரவிய இவ்விரண்டினாலேனும் ஆக்கப்படுவது; இதனை, புறநானூறு,. 116 : 1 - 2. 248 : 1 - 2 -ஆம் அடிகளாலும், “முடித்த குல்லை யிலையுடைய நறும்பூச், செங்கான் மராஅத்த வாலிண ரிடையிடுபு, சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை.......உடீஇ” (முருகு. 201-3) என்னும் அடிகளாலும் உணர்க. 2. நெய்தலும் ஆம்பலும் வயல்களிற் களைகளாக முளைத்தவை. 3. மலங்குமிளிர் செறு : சிலப். 10 : 80, மலங்கு-ஒருவகை மீன். தளம்பு-சேறுகுத்தும் ஒருவகைக் கருவி. 5. கண்ணுறை-மேலீடு; வியஞ்சனம்; மேலீடு என்றதனால் சோற்றின் மேலிட்டு உண்ணப்படுவது எனக்கொள்க. 6. ‘விலாப்புடை மருங்குல் விசிப்ப மாந்திய உழவர்’ என இவ்வடியை உரைநடையிலிட்டு எழுதுவர் பரிமேலழகர்; பரி. 7 : 38 - 9. உரை. 7. சூடு : புறநா. 13 : 11. 11. செழுங்கோள்-செழுவிய காய்க்குலையையுடைய. 14. சிலைத்தார் : புறநா. 10 : 9 - 10, 36 : 12, குறிப்புரை. “திருவிற்றான் மாரி கற்பான் றுவலைநாட் செய்வதேபோல், உருவிற்றாய்த் துளிக்குந் தேற லோங்குதார்” (சீவக. 2070) 13. புறநா. 10 : 5 - 6. திருந்தடி : புறநா. 7 : 2, உரை. (61)
1.‘சென்னி’ எனத் தலைவன் பெயரில் ஒரு பகுதி 13-ஆம் அடியில் வந்துள்ளது.
|