(கு - ரை.) 1. கொய்த இலைக்கறிகள்வாடவும் கொண்டுவந்த விறகு உணங்கவும். 2. மாஅயோள் - மாமை நிறத்தினையுடையவள்;மனைவி. மாமை - அழகிய நிறம்; “மாமைக் கவினே” (ஐங்குறு.35, 103, 134) 3. பசித்தன்று - பசித்தது. ஊர் பசித்தது. 4. கழுத்திற் கறுப்பினையுடைய ஆண்குருவி;“உள்ளிறைக் குரீஇக் காரணற் சேவல்” (நற்.181) 5. வயமான் - சிங்கம். 6. குடம்பை -கூடு. 7. நெல்லின் அரிசி - நெல்லொடுகூடிய அரிசி. ஆர்ந்து - உண்டு. 8. வாடிய ஆம்பற்பூவைப்போன்றசிறகுடைமையாற் புன்புறப் பெடை யென்றார்; “புன்புறப்புறவின் கணநிரை”(பதிற். 39 : 11) 4 - 8. “ஆம்பற் பூவின் சாம்ப லன்ன,கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ, முன்றி லுணங்கன்மாந்திமன்றத், தெருவி னுண்டாது குடைவன வாடி, இல்லிறைப்பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்” (குறுந்.46 : 1 - 5) 9. யாணர்த்து - புதுவருவாயினையுடையது.வேந்து - பகை வேந்தன். விழுமுறின்=விழுமமுறின் - துன்பமுற்றால்;“தன்னிறை விழுமுறினே” (புறநா. 314 : 7) (318)
|