82
சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டி னிணக்கு மிழிசினன் கையது
போழ்தூண் டூசியின் விரைந்தன்று மாதோ
5ஊர்கொள வந்த பொருநனொ
டார்புனை தெரிய னெடுந்தகை போரே.

(பி - ம்.) 3 ‘கட்டினிணர்க்குமிழிசனன்’4 ‘போழ்துன்னூசி’

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) ஊரின்கண் விழாத்தொடங்கிற்றாக அவ்விழாவிற்கு உதவப் போகவும்தன்மனைவி பிள்ளைபெறுதலைப் பொருந்தினாளாக அவள்1 மெய்ந்நோவிற்கு உதவப்போகவும் வேண்டி,பெய்கின்ற மழையையுடைய ஞாயிறு வீழந்தபொழுதின்கட்கட்டிலைப்பிணிக்கும் புலைமகன் கையதாகிய வாரைச்செலுத்தும் ஊசியினும் விரைந்தது, ஊரைக் கொள்ளவந்தவீரனோடு ஆத்தியாற்றொடுக்கப்பட்ட கண்ணியையுடையபெருந்தகையது போர்-எ - று.

நெடுந்தகைபோர், பட்ட மாரிஞான்ற ஞாயிற்றின்கட் சாறுதலைக் கொண்டெனப்பெண் ஈற்றுற்றென இழிசினன்கையதாகிய ஊசியின் விரைந்தன்றெனக் கூட்டுக.

சாறுதலைக்கொண்டென அதற்கு உதவப்போகவும்,பெண் ஈற்றுற்றென அதற்கு உதவப்போகவுமென வேறுவேறுகொள்க; ஒன்றாக உரைப்பாரும் உளர்.


(கு - ரை.) 1. சாறு - விழா, ஈற்று -ஈனுதல்.

2. ஞான்றஞாயிறு - அத்தமித்த சூரியன்;“ஞான்றுதோன் றவிர் சுடர்” (அகநா. 39); தொல்.தொகைமரபு, சூ. 29, இளம். மேற்.

3. நிணக்கும் - பிணிக்கும்; “நிணந்தெனெஞ்ச நிறைகொண்ட கள்வனை” (சீவக. 1311). இழிசினன்- இழிவையுடையான்: புறநா. 287 : 2, 289 : 11; “இழிசினர்க்கேயானும் பசித்தார்க ணீதல், கழிசினங் காத்தல்கடன் (சிறுபஞ்ச. 77)

4. போழ் - பிளவு. ‘விரைவு’ என்னும்மெய்ப்பாட்டிற்கு மேற்கோள்; தொல். மெய்.சூ. 12, இளம்.

மு. சாறு........போரேயென்பது இழிந்ததன்மேல்வந்ததாலெனின்.....ஊசியினது விரைவு மற்றுள்ள விரைவின்உயர்ந்ததாதலின் அதுவும் உயர்ந்ததாம் (தொல்.உவம சூ. 3, இளம்.); “சாறுதலைக் கொண்டென.....என்னும்பாட்டினுள் உவமப்பொருளாகிய போழ்தூண்டூசிக்குப்பல அடைகூறி அதனோடு உவமிக்கப்படும் போர்த் தொழிலினையாதுமோரடையின்றி வாளாது கூறினானாயினும் உவமப்பொருளானே போர்த்தொழிற்குற்றதும் உணரக் கூறினானாம்;என்னை? உண்டாட்டும் கொடையும் உரனொடு நோக்கிமறுத்தலுமுதலாகிய உள்ளக்கருத்தினான் ஒரு கணத்துள்ளேபலவேந்தரை ஒருங்கு வேறற்கு விரைகின்றது போர்த்தொழிலென்பதுதெளியப்பட்டமையின்” (தொல். உவம. சூ. 20, பேர்.);‘சாறுதலைக் கொண்டென.........நெடுந்தகை போரே:இதனுள் ஆர்புனை தெரியல் நெடுந்தகை போர்த்தொழிலுவமையாகியபோழ்தூண்டூசித்தொழிற்குப் பல அடை புணர்ப்பினும்அவை யனைத்தும் போர்த்தொழில் விரைவையே சிறப்பித்துவந்தமையால் வழுவாகாது இலக்கணமாம்’ (இ. வி,.சூ. 641, உரை)

(82)


1. “அகத்தடியாண் மெய்ந்நோவ” (தனிப்பாடல்)