(பி - ம்.) 1 ‘செறுபரல்’ 3 ‘குச்சிநிரை...மேவாய்’ திணை - வெட்சி; துறை - உண்டாட்டு. ---------------- உண்டாட்டாவது:- ‘’தொட்டிமிழுங் கழன்மறவர் மட்டுண்டு மகிழ்தூங்கின்று” (பு. வெ. 15) (இ - ள்.) . . . . . . . . . திரண்டகாலையும் அழகிய வயிற்றினையும் பரந்தமார்பினையும் பசிய கண்ணினையும் குச்சுப்புல் நிரைத்தாற்போன்ற நிறம் பொருந்திய மயிரினையுடையதாடியினையும் செவியிறந்து முன்னே தாழ்ந்தகதுப்பினையுமுடையனாய் வில்லுடனே யார்தான் இவ்வளிக்கத் தக்கான்றான்? ஆராயின், ஊரைப்பெரிதும்நீங்கினதும் இலன் (பி - ம். நீங்கின்றுமலன்);தனக்கு அரணெனக் கருதிக் காட்டைக் கைக்கொண்டதும்இலன்; இற்றைநாட் காலையே பொருந்தாதாரது இனமாகியநிரை போகின்ற இடத்தைப் பார்த்துத் தன் கையாற்குறித்து மெல்ல எண்ணிக் கரந்தையார் செய்யும்பூசலைமாற்றி வில்லாலே கொடு போந்தனன்; அந்நிரைதாம்மிகப்பலவேயாயினும் என்னபயன்படும் எத்தன்மைத்தும்,பால்முதலியன பெய்யப்படாமையிற் சிறிதும் வெள்ளியமுகந்தோன்றாத பானையைக் காண்டலுடனே, நாட்காலத்துஉறைதெறிப்பக் கடையும் மத்தின் ஒலியைக் கேளாதபடிபிறருக்கு நேராகக் கொடுத்தல் (பி - ம். பிறர்க்குநோக்கிக் கொடுத்தல்) வல்லனாயினான், அவனுக்கு?-எ - று. 1 பகைவர் மேல் நடக்கவொட்டாதுஎதிரில் நின்று விலக்குதலின், ‘செருப்பிடைச் சிறுபரலன்னன்’ எனப்பட்டான். ‘அன்ன’ என்று பாடமோதி,செருப்பிடைச் சிறுபரலோசைபோல நெடிய ஓசையையுடையகாலென்றுரைப்பாரும் உளர். யார்கொலென்றது அறியான்வினாதலன்றி வியப்பின்கண்வந்தது. ‘ஊர்பெரி திகந்தன்று மிலனே’என்பது நிரைகோட்கடுமை. சிறுபரலன்னன் கவுளனாகிய அளியனானவன்றான்யார்கொல்லோ? தேரின் வில்லோடு ஊர்பெரிது இகந்தன்றும்இலனாய்க் காடு கைக் கொண்டதும் இலனாய்நோக்கிஎண்ணி மாற்றினான்; மாற்றிக் குழிசிகாண்ட லோடுமத்தொலி கேளாதோனாயினான்; அவனுக்கு அவைதாம்மிகப்பல வாயினும் என்னாம் எனக்கூட்டுக. கேளாதோற்கென உருபுவிரித்துஉரைப்பினும் அமையும். |