(கு - ரை.) 1. "அன்பெனப் படுவது தன்கிளை செறாமை" (கலித்.133); "நண்பொன்றித் தம்மாலே நாட்டப்பட் டார்களைக், கண்கண்ட குற்ற முளவெனினுங் காய்ந்தீயார், பண்கொண்ட தீஞ்சொற் பணைத்தோளாய்! யாருளரோ, தங்கன்று சாக்கறப் பார்" (பழ.16); "குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை" (கொன்றைவேந்தன்,18); "குற்றமது பார்க்குங்காற் சுற்ற மில்லை" (வில்லி. பாரதம், கிருட்டினன்றூது. 17) 2. கையறவு - செயலறுதல். 7. "கோடல், நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ" (நெடுநல். 5 - 6); "மலைச்செங் காந்தட் கண்ணி" (நற்.173) 8. புறநா.166 : 32, 200 : 4.10. மு.புறநா.202 : 2. 9. எல் - ஒளி; சூரியனுக்கு ஆகுபெயர். 11. "மான்மறி விழுந்தது கண்டுமன மயங்கிப், பயிர்க்குரல் கேட்டதன் பான்மைய னாகி" (மணி.23 : 115 - 6) 12. ஓர்க்கும்: புறநா.68 : 17, குறிப்புரை; 280 : 6; கலித். 46 : 13; முருகு. 96; முல்லை. 88; மலைபடு.23. (157)
|