287
துடியெறியும் புலைய
எறிகோல் கொள்ளு மிழிசின
கால மாரியி னம்பு தைப்பினும்
வயற்கெண்டையின் வேல்பிறழினும்
5பொலம்புனை யோடை யண்ணல் யானை
இலங்குவான் மருப்பி னுதிமடுத் தூன்றினும்
ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளும்
10தண்ணடை பெறுதல் யாவது படினே
மாசின் மகளிர் மன்ற னன்றும்
உயர்நிலை யுலகத்து நுகர்ப வதனால்
வம்ப வேந்தன் றானை
இம்பர் நின்றுங் காண்டிரோ வரவே.

(பி - ம்.) 2 - 3 ‘அறிசன, காலமளியினம்புகைப்பினும்’5 - 6 ‘யாஅனையிலங்குவான்’ 9 ‘பிறழும்’ 11 ‘மண்ணநன்று’

திணை - கரந்தை; துறை - நீண்மொழி.

சாத்தந்தையார்.


(கு - ரை.) 1. துடி - ஒருவகைப்பறை.

2. எறிகோல் - பறையை அடிக்குங் குறுந்தடி. இழிசின -புலையா; புறநா. 82 : 3, 289 : 10.

3. கார்காலத்து மழை எய்யப்படும் அம்புகளுக்கு உவமை;“ஒடுங்கா ருடன்றவன் றானை வில்விசை, விடுங்கணையொப்பிற் கதழுறை சிதறூஉ” (பரி. 22 : 5 - 6); “பெயலுறழக்கணைசிதறி” (மதுரைக். 183); “மால்வரைத் தொடுத்துவீழ்ந்த மணிநிற மாரி தன்னைக், காலிரைத் தெழுந்துபாறக் கல்லெனப் புடைத்த தேபோன், மேனிரைத்தெழுந்த வேடர் வெந்நுனை யப்பு மாரி, கோனிரைத்துமிழும் வில்லாற் கோமகன் விலக்கி னானே” (சீவக.451)

4. வேலுக்குக் கெண்டை உவமம்; புறநா. 249 : 6.

3. பொலம்புனையோடை - பொன்னாற் செய்யப்பட்ட பட்டம்;புறநா.

3 : 7 - 11.

5 - 6. வால்மருப்பு - வெண்மையான கொம்பு. யானை...ஊன்றினும்: “கூற்றம்போற் கொடிய யானைக் கோடுழு தகன்றமார்பம், கீற்றுப்பட்டழகி தாகக் கிடக்கெனக்கொடுத்து நிற்பார்”, முளரிமுக நாகமுளை யெயிறுழுதுகீற” (சீவக. 782, 2870)

7. பீடு - பெருமை.

8. பொய்கையிற் பிறழ்ந்த வாளைமீன்.

9. கூட்டுமுதல் - நெற்கூட்டிடத்தே.

10. தண்ணடை பெறுதல் இயல்பென்றபடி; “தண்ணடைபெறுதலுமுரித்தே” (புறநா. 297 : 8). படின் - இறந்தால்.

11. தெய்வமகளிருடைய மணத்தை. நன்று - மிகுதியாக; உம்: அசைநிலை.

12. சுவர்க்கத்தில் அனுபவிப்பார்.

13. பகையரசனுடைய சேனை.

14. வரவுகாண்டிர் - வருதலைப் பார்ப்பீராக.

மு. வஞ்சித்திணைத்துறைகளுள், ‘மாராயம்பெற்றநெடுமொழி’ என்பதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 7, இளம்.; சூ. 8, ந.

(287)