(கு - ரை.) 1. தொடை-நரப்புத்தொடை;தந்தி, தேந்தீந்தொடை : பயனுவமம்; “தீந்தே,னணிபெற வொழுகி யன்ன வமிழ் துறுழ் நரம்பினல்யாழ்”(சீவக. 722) 2-3. புறநா. 249 : 3 - 4; “பகுவாயாமை, கம்பு ளியவ னாக விசிபிணித், தெண்கட் கிணையிற்பிறழும்” (அகநா. 356 : 2 - 4); “ஆமை யகடுபோலங்கட் டடாரி”, “யாமை, யள்ளகட் டன்ன வரிக்கிணை”(பு. வெ. 186, 206) 5. புறநா. 89 : 4. 6. “தைஇத் திங்கட் டண்கயம்படியும்” (நற். 80:7); “பனிச்சுனைத் தெண்ணீர்,தைஇத் திங்கட் டண்ணிய தரினும்” (குறுந்.196); “தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து” (ஐங்குறு.84) 7. “கொளக்கொளக் குறையாச்செல்வத்து” (பதிற். 82 : 12); “கொளக்கொளக்குறையாது தரத்தர மிகாது........நாடு” (மதுரைக்.426 - 8) செயவெனெச்சம் இருதொழிலும் நிகழ்காலமும்ஏற்றுவந்ததற்கு மேற்கோள்; நன். மயிலை. சூ. 343;நன். - வி. சூ. 344. 6-7. “கொளக்குறை படாஅக் கோடுவளர்குட்டத்து” (அகநா. 162) 8. புறநா. 20 : 7 - 9. 9. புறநா. 58 : 10; ‘சோறு’ மருந்தெனப்படுதலை,மணி. 11 : 48, 117-ஆம் அடிகளாலும் அறிக; “சோழ வளநாடுசோறுடைத்து” (ஒளவையார் பாடல்) 12. ஊதும் - நுகரும்; கலித். 66; அகநா.132, 13. பண்ணன் சிறுகுடி : “தனக்கெனவாழாப் பிறர்க்குரி யாளன், பண்ணன் சிறுகுடி”,“பண்ணன் சிறுகுடி வடாஅது, தீநீர்க் கான் யாறு”,“கழற்காற் பண்ணன் காவிரி வடவயி, னிழற்கயம்”(அகநா. 54, 117, 177) 14. “கானப் பாதிரிக் கருந்தகட்டொள்வீ, வேனி லதிரலொடு விரைஇக் காண்வரச்,சில்லைங் கூந்தல்; (அகநா. 261 : 1 - 3) 15. “நன்மா மயிலின் மென்மெலவியலி” (மதுரைக். 608) 16. செல்வு-செல்வம்; “செல்வாயசெல்வந் தருவாய், நீயே”, “செல்வாய்த்திருவானாய் நீயே” (தே.) 17. ஒய்தல் - செலுத்துதல்; புறநா. 116: 8; நற். 74 : 4; பதிற். 73, 87. 19. தாள்வாழ்க வென்றல் மரபு; புறநா.101 : 10, 103 : 12, 171 : 15; “நாதன்றாள் வாழ்க” (திருவாசகம்) (70)
1 “தண்ணீருஞ் சோறு மளிப்பான்றிருப்பனந் தாட்பட்டனே” (தனிப்பாடல்)
|