(பி - ம்.) 3 ‘வேண்டேமென்னா’ திணை - அது. துறை - இயன்மொழி. அவனை அவர் பாடியது. (இ - ள்.) நல்லனவென்றும் தீயனவென்றும் சொல்லப்படுவன சூடும் பூவாதலால் அவை இரண்டினும்வைத்து எண்ணப்படாத குவிந்த பூங்கொத்தினையும் புல்லிய இலையையுமுடைய எருக்கம்பூவாயினும் ஒருவனுடையனவற்றைத் தெய்வங்கள் விரும்பேமென்னா; அதுபோல, யாதும் அறிவில்லாதாரும் புல்லிய குணங்களையுடையாரும் செல்லினும் பாரி கைவண்மை செய்தலைக் கடப்பாடாகவுடையன்-எ - று. 'குவியிணர்ப் புல்லிலை யெருக்கம்' என்றது முதற்கேற்ற அடையடுத்த ஆகுபெயர், உம்மை : இழிவுசிறப்பு. மெல்லியரென்பதற்கு வறுமையுற்றாரென்றும் உரைப்பர். |