(கு - ரை.) 1. “ஒலித்துடன், நீர்மிகி னில்லை சிறை” (பழ. 190); “சிறையு முண்டோ செழும்புனல் மிக்குழீஇ” (மணி. 5 : 19); “சிறை யென்பதில்லை செவ்வே செம்புனல் பெருகு மாயின்” (சூளா. கல்யாண. 155) 3. ஒளியாவது : அரசர்பாலுள்ள தெய்வத்தன்மை; அதனை, “இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற, ஒளியோ டொழுகப் படும்” (குறள், 698); “உறங்கு மாயினு மன்னவன் றன்னொளி, கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்” (சீவக. 248) என்பவற்றால் அறிக. 4. அவற்றோ ரன்னவென்பதில் ஓர் : இடைச்சொல். அவற்றையன்ன -நீர், தீ, வளியென்னும் இம்மூன்றையும் ஒத்த; ஐம்பூதங்களுள் இம் மூன்றுமே புடைபெயர்ந்து வருத்துவனவாதலின், இவற்றைக் கூறினார். வழுதி -பாண்டியன்; சினத்தையுடைய வழுதி யெனக் கூட்டுக. 5. புறநா. 8 : 2, குறிப்புரை. ‘ஞாலம் பொதுவெனப் பொறாவரசர்’ (குறள், 49, பரிமேல்.); “வையம்பொதுக் கடிந்து”, “பூவலயம் பொது நீக்கி யாண்டருளி” (பெரிய. மனுநீதி. 32, கோச்செங்கட். 17); ‘தனி கோலுகையாவது பூசக்கரம் பொதுக்கடிதல்’ (தக்க. 2, உரை) 6. கொண்டி - கொள்ளப்படுவது; ஆவது திறை; “கட்கொண்டிக் குடிப்பாக்கத்து” (மதுரைக். 137) 8. “அளியளோ வளியளென் னெஞ்சமர்ந் தோளே” (குறுந். 56 : 5) 10. செம்புற்றீயல் : புறநா. 119 : 3. 9 - 10. “சிறுபுன் சிதலை சேண்முயன் றெடுத்த, நெடுஞ்செம் புற்றத்து” (அகநா. 149) 11. உலமரல் : புறநா. 207, உரை. 9 - 11. “மண்ணுள்வாழ் சிதலைச் சாதி மற்றவை வாழுநாள்கள், எண்ணியாங் கிகந்த பின்னை யிறகுபெய் தெழும்” (சூளா. அரசியல். 316) 10 - 11. திருவா. நீத்தல். 41. (51)
|