(கு- ரை.) 1 - 2. “கொன்றைகமழ்முடியோனும் வேணியினைப் பின்னல்படு குஞ்சியாக்கித், துன்றுமயிற் பீலிநெடுங் கண்ணிதிரு நெற்றியுறச்சுற்றினானே” (வி. பா. அருச்சுனன்றவநிலை. 82);“கானிறை குஞ்சிச் சூட்டிற் களிமயிற் கலாபஞ்சூடி”, “வேடுருவாகி நின்றான்”, “குஞ்சிக்கங்குல்வாய்ச் சிலைபோல் வெட்சிக் கண்ணி சூழ்கலாபச் சூட்டும்” (திருவிளை. 22: 25, 37: 13 - 4) 3. “கைவேல், களிற்றொடுபோக்கி வருபவன், மெய்வேல் பறியா நகும்” (குறள்,774); “மறவன் நெருப்பிமையாக், கைக்கொண்டவெஃகங் கடுங்களிற்றின் மேற்போக்கி” (பு.வெ. 140) 2 - 7. “கொல்லேறு பாய்ந்தழிந்தகோடுபோற் றண்டிறுத்து, மல்லேறு தோள்வீமன் மாமனைப்- புல்லிக்கொண், டாறாத போர்மலைந் தானங்கரசர்கண்டார்த்தார், ஏறாட லாய ரென” (பாரதம்) மு. தும்பைத்திணைத்துறைகளுள்,படையறுத்துப் பாழிகொள்ளு மேமமென்பதற்கு மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 14, இளம்.; சூ. 17, ந.
(274)
|