358
பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம்
ஒருபக லெழுவ ரெய்தி யற்றே
வையமுந் தவமுந் தூக்கிற் றவத்துக்
கையவி யனைத்து மாற்றா தாகலிற்
5கைவிட் டனரே காதல ரதனால்
விட்டோரை விடாஅ டிருவே
விடாஅ தோரிவள் விடப்பட் டோரே.

(பி - ம்.) 3 ‘தூக்கிறறவத்திறகைவினையவினைத்தும்’ 4 ‘ஐயவித்துணையும்’ 6 ‘விடாது திருவே’ 7 ‘விடாதோரிவண்’

திணை - அது; துறை - மனையறம் துறவறம்.

வான்மீகியார் (பி - ம். வான்மீகையார்)


(கு - ரை.) 1. பருதி - சூரியன். பயம் - பிரயோசனம்.

2. பகல் - நாள்; ஒரு முகூர்த்தமுமாம். எழுவரைத் தலைவராக எய்திய அத்தன்மையையுடையது.

3. வையம் - பூமி. தூக்கின் - சீர்தூக்கினால்.

4. ஐயவி - வெண்சிறுகடுகு. ஆற்றாது - சீர் நில்லாது.

3 - 4. தவத்திற்கு வையம் ஐயவியளவும் நிறையொவ்வாது; சீவக. 2983; "ஏமநீ ருலகமோ ரிம்மிப் பாலென, நாமவே னரபதி நீக்கி நன்கலம், தூமமார் மாலையுந் துறக்கின் றானரோ" (சீவக. 3027)

5. காதலர் - வீட்டில் விருப்பமுடையோர்.

6. பற்றுவிட்டோரை ; "நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான். றன்னையே தான்வேண்டுஞ் செல்வம்" (திவ். பெருமாள். 5 : 9)

7. விடாதோர் - விருப்பமொழியாதவர்கள்.

மு. தொல். புறத்திணை. சூ. 21, ந. மேற்.

(358)