(கு - ரை.) 1. சான்றோர் -போர்வீரர்; “தேர்தர வந்த சான்றோ ரெல்லாம்”(புறநா. 63) என்பதும் “சான்றோர் மெய்ம்மறை”(பதிற். 14 : 12) என்னுமிடத்து ‘ஈண்டுச் சான்றோரென்பதுபோரில் அமைதியையுடைய வீரரை’ என்னும் அதன் உரையும்அறிதற்பாலன. 2 - 3. மணஞ்செய்யப் பெறாத கன்னியரின்கூந்தல் ஓராடவராலும் தீண்ட வொண்ணாமையால்,பகைவராற் றீண்டமுடியாத முள்வேலிக்கு அஃது உவமைகூறப்பெற்றது. 4. கல்லென்பாசறை - கல்லென்னும்ஓசைபட ஒலிக்கின்ற படை வீடு. 5. “முரசுமுழங்குதானை...மூவர்” (புறநா.35 : 3 - 4) 6. “ஒளிறேந்து மருப்பிற் களிறு” (புறநா.335 : 10; நற். 284 : 9) 7. எனைநாள் - எத்தனைநாள். 8 - 9. தன்னை எறியாதாரை எறிவதென்பதுஎங்குள்ளது? எதிர்ந்தோரையும் எதிர்த்து எறிதல்செய்யானாகச் செய்தே எறியாரை இவனெறிதல்யாண்டுளது? இல்லை யென்றபடி. 10. அவன் கருதிய காரியத்தை அறிந்தவர்யாவர்? 11. பலம் - பலராகவுள்ளேம்; புறநா.79 : 5 - 6; ‘வீரரல்லாதார் பலர் திரண்டு ஆர்த்தால்அதற்கு வீரனஞ்சான்’ (குறள், 763, பரிமேல்.) என்பதும்,“மறுமனத்த னல்லாத மாநலத்த வேந்த, னுறுமனத்தனாகியொழுகிற் - செறுமனத்தார், பாயிரங் கூறிப்படைதொக்கா லென் செய்ப, ஆயிரங் காக்கைக்கோர்கல்” (பழ. 165) என்பதும், “தடத்திடைக்காக்கை யொன்றே யாயிரங் கோடி கூகை, இடத்திடையழுங்கச் சென்றாங் கின்னுயிர் செகுத்த தன்றே’ (சீவக.1927) என்பதும் இவ்வடியின் கருத்தை வலியுறுத்தும். 13. பரி - நடை; “வளிதொழி லொழிக்கும்வண்பரிப் புரவி” (புறநா. 304 : 3) 14. எல் - இரவு. 16. ஏந்துவன்போலான் - ஏந்தான். 15 - 6. யானைப்போர்க்கு வேல் உரித்தென்பர்;“மேல்வருங் களிற் றொடு வேறுரந்து”, “வேலினட்டகளிறு”,“கறையடி யானைக் கல்ல, துறைகழிப் பறியா வேலோன்”(புறநா. 274, 302, 323); “ஒன்றாயினும் பலவாயினுமோரோச்சினு ளெறிய, வென்றாயின மதவேழமு முளவோவெனவினவிப், பொன்றாழ்வரைப் புலிப்போத்தெனப்புனைதார் மிஞிறார்ப்பச், சென்றானிகல்களிறாயிர மிரியச்சின வேலோன்” (சீவக.2262) 13 - 6. ‘’கரிமேலோன் தொட்டதுகழலே கையது வேலே, சுட்டி யதுவும் களிறே..............யானைகாமினவன் பிறிதெறி யலனே.” இச்செய்யுள்புறத்திரட்டிற் கண்டது. மு. பொருளின்றியுய்த்த பேராண்பக்கத்தின்பாற்படுமென்பர்: தொல். புறத்திணை. சூ. 8, ந. (301)
|